Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • சென்னை வேளச்சேரியில் ஆக்கிரமிப்பு என்று கூறி மக்கள் குடியிருப்புகளைக் கையகப்படுத்தும் முடிவை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டி அறிக்கை

சென்னை வேளச்சேரியில் ஆக்கிரமிப்பு என்று கூறி மக்கள் குடியிருப்புகளைக் கையகப்படுத்தும் முடிவை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டி அறிக்கை

வேளச்சேரி ஏரியினை மீட்பதாகக் கூறி சென்னை வேளச்சேரி பகுதியில் அமைந்துள்ள 850 வீடுகளை இடித்து, அங்கு வசிக்கும் 5000க்கும் மேற்பட்ட மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற திமுக அரசு முயல்வது வன்மையான கண்டனத்திற்குரியது. குடியிருப்புகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வீதியில் இறங்கிப் போராடிய பூர்வ குடி மக்களின் மீது காவல்துறை மூலம் திமுக அரசு அடக்கு முறைகளை ஏவுவது சிறிதும் மனிதநேயமற்ற கொடுஞ் செயலாகும். மேலும் தேர்தல் வாக்குறுதியில் திமுக பட்டா வழங்குவதாக வாக்குறுதி கொடுத்தது, ஆனால் இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், அவர்கள் குடியிருப்பு இடத்தை காலி செய்ய சொல்லி, அகற்றுவது எந்த வகையில் நியாயம். எனவே பல ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கு இந்த அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி பட்டா வழங்க ஆவண செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

Releated Posts

தேமுதிக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பத்திரிகையாளர் அழைப்பு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இந்த ஆண்டும் சென்னை, கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் (கேப்டன் ஆலயம்), (12.03.2026) வியாழக்கிழமை…

ByBySenthil KumarMar 11, 2026

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தேமுதிக மகளிர் அணி ஆலோசனை கூட்டம் பத்திரிக்கை செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் புரட்சி அண்ணியார், கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தலைமை…

ByBySenthil KumarMar 8, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...