Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தீபாவளிக்கு முன்பே சம்பளம், பண்டிகை முன்பணம், பணி நிரந்தரம் வழங்க வேண்டி அறிக்கை

12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தீபாவளிக்கு முன்பே சம்பளம், பண்டிகை முன்பணம், பணி நிரந்தரம் வழங்க வேண்டி அறிக்கை

12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தீபாவளிக்கு முன்பே சம்பளம், பண்டிகை முன்பணம், பணி நிரந்தரம் வழங்க வேண்டும். 41 மாதங்கள் முடிந்தும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு கொடுத்த பணி நிரந்தரம் வாக்குறுதியை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றாமல் வேடிக்கை பார்க்கலாமா?. திமுக வாக்குறுதிபடி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து இருந்தால், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு கிடைக்கின்ற பணச் சலுகைகள் கிடைத்து இருக்கும். தற்போது கிடைக்கின்ற சொற்ப ஊதியம் 12,500 ரூபாயை வைத்து குடும்பங்கள் நடத்த முடியாமல் தவித்து வருகின்றார்கள். எனவே தீபாவளி பண்டிகை கொண்டாட அக்டோபர் மாத சம்பளத்தை முன்கூட்டியே வழங்க வேண்டும் எனப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து உள்ளார்கள். அதுபோல், பண்டிகை முன்பணம் வழங்கி அதனை மாத சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டும் எனவும் கேட்டு வருகின்றார்கள். 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்கள் தீபாவளி கொண்டாட குறைந்தபட்சம் இந்த கோரிக்கையை, இந்த அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டு கொள்கிறேன். 13 ஆண்டுகளாக பணி நிரந்தரம் கேட்டு போராடி வருகின்ற பகுதிநேர ஆசிரியர்களின் பணியை முறைப்படுத்தி, காலமுறை சம்பளம், பணிநிரந்தரம் செய்து அதனை தீபாவளி பரிசாக அறிவிக்க தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

Releated Posts

LIC பெண் அதிகாரி கல்யாணி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டி அறிக்கை

மதுரை மேலவெளி வீதியில், ரயில் நிலையம் எதிரில் அமைந்துள்ள இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக (LIC) கட்டிடத்தின் அலுவலகத்தில், 20.12.2025 அன்று இரவு ஏற்பட்ட…

ByBySenthil KumarJan 21, 2026

முன்னாள் கழக தொண்டர் அணி செயலாளரும், கழக தேர்தல் பணிக்குழு செயலாளருமான திரு.S.கணேசன் அவர்களின் மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள், கழக முன்னாள் தொண்டர் அணி செயலாளரும், கழக தேர்தல்…

ByBySenthil KumarJan 19, 2026

தேமுதிக – பத்திரிக்கை செய்தி – 17.01.2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், புரட்சி அண்ணியார், கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (17.01.2026) தலைமை கழகத்தில் (கேப்டன் ஆலயம்)…

ByBySenthil KumarJan 17, 2026

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு வாழ்த்துச் செய்தி

“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற நம்பிக்கையுடன், தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கும் என்ற உறுதியோடு, தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை நாம் அனைவரும்…

ByBySenthil KumarJan 14, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...