Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தீபாவளிக்கு முன்பே சம்பளம், பண்டிகை முன்பணம், பணி நிரந்தரம் வழங்க வேண்டி அறிக்கை

12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தீபாவளிக்கு முன்பே சம்பளம், பண்டிகை முன்பணம், பணி நிரந்தரம் வழங்க வேண்டி அறிக்கை

12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தீபாவளிக்கு முன்பே சம்பளம், பண்டிகை முன்பணம், பணி நிரந்தரம் வழங்க வேண்டும். 41 மாதங்கள் முடிந்தும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு கொடுத்த பணி நிரந்தரம் வாக்குறுதியை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றாமல் வேடிக்கை பார்க்கலாமா?. திமுக வாக்குறுதிபடி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து இருந்தால், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு கிடைக்கின்ற பணச் சலுகைகள் கிடைத்து இருக்கும். தற்போது கிடைக்கின்ற சொற்ப ஊதியம் 12,500 ரூபாயை வைத்து குடும்பங்கள் நடத்த முடியாமல் தவித்து வருகின்றார்கள். எனவே தீபாவளி பண்டிகை கொண்டாட அக்டோபர் மாத சம்பளத்தை முன்கூட்டியே வழங்க வேண்டும் எனப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து உள்ளார்கள். அதுபோல், பண்டிகை முன்பணம் வழங்கி அதனை மாத சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டும் எனவும் கேட்டு வருகின்றார்கள். 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்கள் தீபாவளி கொண்டாட குறைந்தபட்சம் இந்த கோரிக்கையை, இந்த அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டு கொள்கிறேன். 13 ஆண்டுகளாக பணி நிரந்தரம் கேட்டு போராடி வருகின்ற பகுதிநேர ஆசிரியர்களின் பணியை முறைப்படுத்தி, காலமுறை சம்பளம், பணிநிரந்தரம் செய்து அதனை தீபாவளி பரிசாக அறிவிக்க தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

Releated Posts

மாநகராட்சியின் அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு நிவாரணம் நிதி வழங்க வேண்டி அறிக்கை

சென்னை திருவொற்றியூரில் தாங்கல் பீர் பயில்வான் தர்கா ரோடு பகுதியில் மின்சாரம் தாக்கி 12ஆம் வகுப்பு பள்ளி மாணவன் திரு.நஃபில் உயிரிழந்துள்ளார். டியூஷன் (Tuition)…

ByBySenthil KumarJul 3, 2025

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் உலக மருத்துவர்கள் தின வாழ்த்துக்கள்

மருத்துவர்களின்  வரலாற்றில்,   மறக்க    முடியாத     நாள்   இன்று (01-07-2025) மருத்துவர்கள் தினம்! மருத்துவத்துறையில் முன்மாதிரியான மாநிலமாகத் திகழும் நமது தமிழ்நாட்டில், அரசு மருத்துவர்களுக்குக் குறைவான…

ByBySenthil KumarJul 1, 2025

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு மரணமடைந்ததை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு மரணமடைந்ததை கண்டித்து வரும் (05.07.2025) சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வெள்ளிச் சந்தை திடலில் சனிக்கிழமை…

ByBySenthil KumarJul 1, 2025

“மா” (மாம்பழம்) விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

“மா” (மாம்பழம்) விளைச்சல் செய்யும் விவசாயிகளுக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. தமிழக அரசை கண்டித்து வரும் (30.06.2025) திங்கள் கிழமை காலை 10 மணியளவில் கிருஷ்ணகிரி புதிய…

ByBySenthil KumarJun 23, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...