Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • ரயிலில் கர்ப்பிணிப் பெண் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

ரயிலில் கர்ப்பிணிப் பெண் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்பது கவலையளிக்கிறது. இதுபோன்ற துயர நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, கோவையிருந்து திருப்பதி செல்லும் விரைவு ரயிலில், 4 மாத கர்ப்பிணிப் பெண்ணுக்குக் கயவர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மேலும், கூச்சலிட்ட அப்பெண், கர்ப்பிணி என்று கூட பார்க்காமல் அவரை ஓடும் தொடர் வண்டியிலிருந்து வெளியே தள்ளியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட கயவர்கள் தப்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரியச் சிகிச்சை அளிப்பதோடு, தப்பியோடிய கயவர்களை கைது செய்து, கடும் தண்டனை பெற்றுத்தரத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 100க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. பதிவு செய்யப்படாத வழக்குகள் இன்னும் அதிகமாக இருக்கும் எனத் தெரிகிறது. இளைஞர்களிடையே அதிகரித்துள்ள போதை கலாச்சாரமும், ஆபாச இணையதளங்களும், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்குக் காரணமாக உள்ளன. எனவே, சமீப காலமாக தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போதை கலாச்சாரத்தை முற்றிலும் ஒழிப்பதோடு, படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தத் தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் என தேமுதிக கேட்டுக்கொள்கிறது. மேலும் சென்னையில் 84 வயது மூதாட்டியை கை, கால்கள் கட்டப்பட்டு பாலியல் வன்கொடுமை, வேலூரில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை, கிருஷ்ணகிரியில் மாணவியை ஆசிரியர்களே பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் என்று தொடர்ந்து இதுபோன்று நடப்பது மிகப்பெரிய தலைகுனிவாகத் தமிழ்நாட்டைப் பார்க்க வேண்டியுள்ளது. இதுபோன்று செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் குண்டர் சட்டத்தில் கைது செய்து, வெளியே வர முடியாத அளவுக்கு கடும் தண்டனை வழங்கினால் மட்டுமே, பாலியல் வன்கொடுமைகளுக்கு தீர்வு காண முடியும். கஞ்சா மற்றும் போதையால் மனிதர்கள் மிருகங்களாக மாறி, பெண்களைச் சீரழிக்கும் மனித மிருகங்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்து இந்த அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

Releated Posts

முன்னாள் பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை அவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கழகப் பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்களின் தாயார் திருமதி.K.அம்சவேணி கண்ணையா அவர்கள் திருவுருவப் படத்திற்கு…

ByBySenthil KumarOct 9, 2025

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர்திருமதி.பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கழகப் பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்களின் தாயார் திருமதி.K.அம்சவேணி கண்ணையா அவர்கள் மறைவிற்கு நேரிலும், தொலைபேசியிலும், சமூக வலைத்தளங்களின் மூலம் அஞ்சலிசெலுத்திய அனைவருக்கும் நன்றி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கழகப் பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்களின் தாயார் திருமதி.K.அம்சவேணி கண்ணையா அவர்கள் மறைவிற்கு தொலைப்பேசியில்…

ByBySenthil KumarOct 9, 2025

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை காணாத கரூர் அரசியல் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்  அறிக்கை 

கரூர் மாவட்டத்தில், தவெக தலைவர் விஜய் பரப்புரையில் கலந்துகொண்ட பொதுமக்கள் இதுவரை 29 பேர் உயிரிழந்த செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. 40க்கும் மேற்பட்டவர்கள்…

ByBySenthil KumarSep 30, 2025

கோவை கோட்டைபாளையம் தனியார் காப்பகத்தில் குழந்தைகளுக்கு நடந்த கொடுமை தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை  

கோவை மாவட்டம், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தின் கோட்டைபாளையம் பகுதியில் இயங்கும் “கிரேஸ் ஹேப்பி ஹோம் டிரஸ்ட்” என்ற தனியார் குழந்தைகள் காப்பகத்தில் பணிபுரியும் ஊழியர்…

ByBySenthil KumarSep 30, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...