Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • மதுவை ஒழிப்போம் என்ற விளம்பரம் ஒருபுறம், பொங்கல் நாட்களில் 725 கோடி ரூபாய் டாஸ்மாக் வருமானம் ஒருபுறம் இந்த முரண்பாட்டைக் கண்டித்து அறிக்கை

மதுவை ஒழிப்போம் என்ற விளம்பரம் ஒருபுறம், பொங்கல் நாட்களில் 725 கோடி ரூபாய் டாஸ்மாக் வருமானம் ஒருபுறம் இந்த முரண்பாட்டைக் கண்டித்து அறிக்கை

தமிழகத்தில் போதையின் பாதையில் யாரும் போக வேண்டாம் என்று தமிழக அரசின் மூலம் விளம்பரம் செய்யும் தமிழக முதல்வர், தன்னுடைய அதிகாரத்தில் ஒரு கையெழுத்திலேயே டாஸ்மாக் மது விற்பனையை நிறுத்தலாமே?. அதை விட்டுவிட்டு கண் துடைப்பு நாடகமாக விளம்பரத்தில் கண்ணீரை வடிப்பதும், மறுபுறம் பொங்கல் நாட்களில் 725 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக்கில் மது விற்பனை செய்து தமிழ்நாட்டைப் போதை நாடாக மாற்றியது ஒன்று தான் திமுகவின் சாதனை ஆகும். மது விற்பனை ஒன்று மட்டும் தான் சாதனையே தவிர, தமிழகத்தில் முன்னேற்றமும், பாராட்டுவதற்கும் ஒன்றும் இல்லை என்பதை இந்த (மது விற்பனை) சாதனையை, வேதனையோடு சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். எனவே தமிழக அரசு வீண் விளம்பரங்கள் மூலம் விளம்பரத்தைத் தேடாமல், ஒரே கையெழுத்து மூலம் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடினாலே, தமிழகத்தில் இங்கு யாரும் போதையின் பாதையில் போக மாட்டார்கள். அதேபோல திமுக அமைச்சர்கள் நடத்தும் மது ஆலைகளை மூடினாலே தமிழ்நாட்டில் போதையை ஒழித்துவிடலாம். எனவே இதையெல்லாம் செய்யத் தவறிய தமிழக முதல்வர் அவர்கள் வெறும் விளம்பரத்தின் மூலம் விளம்பரத்தைத் தேடிக்கொள்கிறாரே தவிர, உண்மையில் மதுவை ஒழிக்க எந்த நடவடிக்கையும் இந்த அரசு எடுக்கவில்லை, சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக இந்த அரசின் இரட்டை நிலைப்பாடு கண்டனத்துக்குறியது.

Releated Posts

தேமுதிக வறுமை ஒழிப்பு தின நல உதவிகள் – பத்திரிக்கை செய்தி – 24.08.2026

*தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பத்மபூஷன்* *கேப்டன் விஜயகாந்த்* அவர்களின் பிறந்த நாளான, ஆகஸ்ட் 25-யை *”வறுமை ஒழிப்பு தினமாக”* தேமுதிக கடைப்பிடித்து…

ByBySenthil KumarAug 24, 2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின விழாவை நாம் சிறப்பாகக் கொண்டாடும் இந்த நன்னாளிலே, நம் தாய்நாட்டின் விடுதலைக்காகத் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த…

ByBySenthil KumarAug 14, 2026

கரூர் சிறுமி பாலியல் வன்கொடுமை முயற்சியை தடுத்து நிறுத்திய பாட்டிக்கு பாராட்டு

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள நான்கு வயது, 9 வயது, சிறுமிகள், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய பல முறை முயற்ச்சி செய்த அந்த…

ByBySenthil KumarAug 14, 2026

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 ராமநாதபுரம் மீனவர்கள் உள்ளிட்ட கைது செய்யபட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி அறிக்கை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களையும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது.…

ByBySenthil KumarAug 14, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...