Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் மற்றும் முன்னாள் உதவி ஆணையர் கைது செய்ததை பாராட்டி அறிக்கை

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் மற்றும் முன்னாள் உதவி ஆணையர் கைது செய்ததை பாராட்டி அறிக்கை

தமிழக அரசியல் வரலாற்றில் எந்த மாநகராட்சியிலும் இல்லாத அளவிற்கு, மதுரை மாநகராட்சியில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக பல நாட்களாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் மற்றும் முன்னாள் உதவி ஆணையர் சுரேஷ்குமார் இந்த ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஊழல் குறித்து புகார் அளித்த மக்களுக்கு இன்று நியாயமான தீர்ப்பு கிடைத்துள்ளது. இந்த தீர்ப்பை வழங்கிய நீதிமன்றத்திற்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) சார்பாக மனமார்ந்த நன்றிகளையும்   வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். மாநகராட்சி வரியை உயர்த்தி, அதன் மூலம் மக்களுக்கு சேவை வழங்குவதாகக் கூறி, அந்தப் பணத்தில் ஊழல் செய்யும் இத்தகைய ஊழல்வாதிகளுக்கு நீதிமன்றங்கள் கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும். இதன்மூலமே தமிழ்நாட்டில் லஞ்சமும் ஊழலும் இல்லாத, கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இலட்சியத்தின் படி  நேர்மையான ஆட்சி அமைய முடியும். இந்த ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டு, மீண்டும் இது போன்ற தவறுகள்  நடக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும். மருத்துவமனையில் அனுமதி என்ற போர்வையில் ஒட்டுமொத்த நீதிமன்றங்களையும், ஜனநாயகத்தையும் கேள்விக்கு உட்படுத்தும் இத்தகைய தொடர் செயல்கள் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இதுபோன்ற நாடகங்களை விடுத்து, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற நிலைப்பாட்டை நீதி மன்றம் உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும். மேலும், ஊழல் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை மீட்டு, மதுரை மாநகராட்சிக்கு மீண்டும் செலுத்தி,  மதுரை மாநகராட்சிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் இந்த அரசு செய்து தர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

Releated Posts

முன்னாள் பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை அவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கழகப் பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்களின் தாயார் திருமதி.K.அம்சவேணி கண்ணையா அவர்கள் திருவுருவப் படத்திற்கு…

ByBySenthil KumarOct 9, 2025

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர்திருமதி.பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கழகப் பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்களின் தாயார் திருமதி.K.அம்சவேணி கண்ணையா அவர்கள் மறைவிற்கு நேரிலும், தொலைபேசியிலும், சமூக வலைத்தளங்களின் மூலம் அஞ்சலிசெலுத்திய அனைவருக்கும் நன்றி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கழகப் பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்களின் தாயார் திருமதி.K.அம்சவேணி கண்ணையா அவர்கள் மறைவிற்கு தொலைப்பேசியில்…

ByBySenthil KumarOct 9, 2025

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை காணாத கரூர் அரசியல் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்  அறிக்கை 

கரூர் மாவட்டத்தில், தவெக தலைவர் விஜய் பரப்புரையில் கலந்துகொண்ட பொதுமக்கள் இதுவரை 29 பேர் உயிரிழந்த செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. 40க்கும் மேற்பட்டவர்கள்…

ByBySenthil KumarSep 30, 2025

கோவை கோட்டைபாளையம் தனியார் காப்பகத்தில் குழந்தைகளுக்கு நடந்த கொடுமை தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை  

கோவை மாவட்டம், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தின் கோட்டைபாளையம் பகுதியில் இயங்கும் “கிரேஸ் ஹேப்பி ஹோம் டிரஸ்ட்” என்ற தனியார் குழந்தைகள் காப்பகத்தில் பணிபுரியும் ஊழியர்…

ByBySenthil KumarSep 30, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...