Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமை தொடரும் அவலம் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமை தொடரும் அவலம் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் உணவகத்தில் பணியாற்றி வந்த 22 வயது பெண்ணை, அங்கு வேலை செய்து வந்த உணவக மாஸ்டர் மற்றும் மேலும் சிலர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கல்லூரி வளாகத்தில் ஒரு பெண்ணுக்கு நடந்த கொடுமை ஏற்புடையதல்ல. இந்த கொடூர சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள உணவக மாஸ்டர் உள்ளிட்ட குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும். அதேபோல், சென்னை தரமணியில் வேலை தேடி வந்த வடமாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பத்திற்கு நேர்ந்த சோகமான சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. கணவன், மனைவி மற்றும் 2 வயது குழந்தையுடன் வந்த கவுரவின் மனைவி, வடமாநிலத்தை சேர்ந்த கல்லூரி காவலாளி உள்ளிட்ட 5 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் மனிதத்தன்மையற்ற ஒரு கொடூரச் செயலாகும். கணவன் மற்றும் குழந்தையின் உடல்கள் சட்டலமாக கிடைத்த நிலையில், மனைவியின் உடல் தேடப்பட்டு வருவது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. இந்த அரக்கத்தனமான செயலை செய்த கயவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில், இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். சட்டம், ஒழுங்கை காக்க வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

Releated Posts

திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே நேற்று (05.05.2026) நிகழ்ந்த வாகன விபத்தில் அவர் உயிரிழந்தார் என்கிற செய்தி…

ByBySenthil KumarMay 7, 2026

மதச்சார்பற்ற வெற்றி கூட்டணியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

மதச்சார்பற்ற வெற்றி கூட்டணி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.…

ByBySenthil KumarMay 5, 2026

கருப்பு கொடியேற்றி, கருப்பு உடை அணிந்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தேமுதிக தலைமை அலுவலகத்திலும் (கேப்டன் ஆலயம்), கேப்டன் வீட்டிலும், தேமுதிகவினர் கருப்புக் கொடியேற்றி எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். புரட்சி…

ByBySenthil KumarApr 16, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...