Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • புரசைவாக்கம், திடீர்நகர் திட்ட பகுதியில் அரசு மூலம் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு – தற்போது கிடப்பில் போடப்பட்ட தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை மீண்டும் செயல்முறை படுத்திட வேண்டி அறிக்கை

புரசைவாக்கம், திடீர்நகர் திட்ட பகுதியில் அரசு மூலம் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு – தற்போது கிடப்பில் போடப்பட்ட தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை மீண்டும் செயல்முறை படுத்திட வேண்டி அறிக்கை

எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மண்டலம் 8 பழைய வட்டம் 104, புதிய வட்டம் 99, புரசைவாக்கம் பிரிக்ளின் சாலையிலுள்ள திடீர்நகர் திட்ட குடிசைப்பகுதியில் சுமார் 600- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஓலைக்குடிசையாய் இருந்த இவ்விடம் மழை மற்றும் வெயில் காலங்களில் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சுமார் 40 வருடங்களுக்கு முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆணையின் பேரில் குடிசைகளை அகற்றி, அனைத்து வீடுகளுக்கும் கல்நார் ஓடு போட்டு, கல் சுவர்கள் கட்டி தரப்பட்டது. இருப்பினும் அப்பகுதி மக்கள் 50 ஆண்டு காலமாக எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி சுகாதாரமற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர். மேலும் அப்பகுதி மக்களின் இறந்த சடலங்களை வைப்பதற்கு கூட இடம் இல்லாமலும், இறப்பு சடங்குகள் செய்ய முடியாமலும் தவிக்கிறார்கள்.

மேலும் டாக்டர் பத்மபூஷன் கேப்டன் அவர்கள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருந்த பொழுது தேமுதிக 2011 முதல் 2016 வரை எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.நல்லதம்பி அவர்கள் பேரவையில் இந்த கோரிக்கை வலியுறுத்திய பொழுது மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் சட்டப்பேரவையில் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதன்பிறகு குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் மூலம் பலமுறை கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டும், அப்பகுதி மக்களிடம் நேரில் ஆய்வு செய்தும், பயோ மெட்ரிக் சர்வே எடுக்கப்பட்டு அதிகாரிகள் உறுதியாளித்தார்கள். மேலும், இங்கு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தருவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்றும், அதற்கான நிதி வழிமுறை உள்ளதென்றும் பலமுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த குடியிருப்புகளுக்கு அருகில் தனியாருக்கு சொந்தமான 18 தளங்கள் (TVH Lumbini Square) கொண்ட அடிக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளது. ஆகவே அப்பகுதி மக்களுக்கு அதே இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டித் தந்து, தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்வதற்கும் அவர்களின் வாழ்க்கை தரம் உயர்வதற்கும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

Releated Posts

திருவேற்காடு நகராட்சியில் கோலடிகிராமத்தில் மக்கள் வாழும் பகுதியில் அமையவுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டி அறிக்கை

திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட கோலடி கிராமத்தின் வார்டு 4, சின்னக்கோலடி பகுதியில் வசித்து வரும் கோலடி கிராமம், சர்வே எண். 22, 23, 24 அடங்கிய சுமார் 14 ஏக்கர் பரப்பளவு கொண்ட…

ByBySenthil KumarMay 30, 2025

பீளமேடு பகுதி விளாங்குறிச்சி சாலையில் புதிதாக குப்பை தரம் பிரிக்கும் கிடங்கு அமைய உள்ளதை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டி அறிக்கை

கோவை மாநகர் மாவட்டம், பீளமேடு பகுதி 26வது வார்டு விளாங்குறிச்சி சாலையில் அமைந்துள்ள இந்து மயானத்தில் புதிதாக அமைய உள்ள குப்பை கிடங்கு தரம் பிரிப்பு மையத்திலிருந்து…

ByBySenthil KumarMay 28, 2025

பட்டினி தினம் மற்றும் தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்பது குறித்து அறிக்கை

பட்டினி தினம் என்று ஒருநாள் எப்போதும் இருக்கக் கூடாது. இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம் உறுதி…

ByBySenthil KumarMay 28, 2025

தலைமை ஹாஜி சலாஹூதீன் முஹம்மத் அய்யூப் சாஹிப் அவர்கள்மறைவிற்கு இரங்கல் செய்தி

தமிழ்நாடு அரசின் மாநில தலைமை ஹாஜி சலாஹூதீன் முஹம்மத் அய்யூப் சாஹிப் அவர்களின் வயது 84. வயது மூப்பு காரணமாக, உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று (சனிக்கிழமை)…

ByBySenthil KumarMay 25, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...