Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டி போராடுபவர்களைக் கைது செய்வதைக் கண்டித்து அறிக்கை

பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டி போராடுபவர்களைக் கைது செய்வதைக் கண்டித்து அறிக்கை

பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தர கோரி சென்னையில் தொடர்ந்து பத்து நாட்களாகப் போராடி வருகிறார்கள். பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தின் போது காவல்துறையினர் காலையில் கைது செய்வதும், மாலையில் விடுவிப்பதும் தினந்தோறும் வாடிக்கையாக உள்ளது. இதை தேமுதிக சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம். இதற்கு முன்பு பகுதி நேர ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக தங்களுடைய உரிமைக்கான போராட்டத்தை முன் நிறுத்தி வருகின்றனர். ஆளும் திமுக அரசு, கொடுத்த வாக்குறுதியாக 181ல் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார் என்று ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாட்களில் பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்கள் கொடுத்த வாக்குறுதிப்படி நடந்து கொள்ளவில்லை. 50 மாதங்கள் முடிந்தும் பகுதி நேர ஆசிரியர்களுக்குக் கொடுத்த பணி நிரந்தரம் செய்யவில்லை. இதுவரைக்கும் அவர்களுடைய கோரிக்கையைச் செவி சாய்க்கவும் இல்லை, பரிசீலனை செய்து, அவர்களுக்கு ஆவணமும் செய்யவில்லை. தமிழக அரசு பள்ளிகளில் 12ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் 15ஆண்டுகளாக பணி செய்து வருகிறார்கள். தற்போது கிடைக்கின்ற சொற்ப ஊதியம் 12,500 ரூபாயை வைத்து குடும்பங்கள் நடத்த முடியாமல் தவித்து வருகின்றார்கள். தேர்வு எழுதி தகுதி பெற்ற அவர்களுடைய அடிப்படை உரிமையைக் கேட்டதை அலட்சியப் படுத்தாமல், கண்ணீர் மல்க வாழ்ந்து கொண்டிருக்கும் பல ஆயிரம் குடும்பங்களை காக்க வேண்டியது இந்த அரசின் கடமை. இந்த அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு அவர்களுக்கு உரிய ஆவணம் செய்து  பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தேமுதிக சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.

Releated Posts

தேமுதிக தலைமை கழகம் அறிவிப்பு

வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் “உள்ளம் தேடி” “இல்லம் நாடி” பூத் முகவர்களுடன் நேரடி சந்திப்பு மற்றும் “கேப்டனின் ரத ‍‍யாத்திரை”…

ByBySenthil KumarJul 31, 2025

தமிழக முதலமைச்சர் பூரண நலம் பெற வேண்டி வாழ்த்து

தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இரண்டு நாளில் வீடு திரும்புகிறார் என்ற செய்தி மகிழ்ச்சியடைகிறது. அவர் பூரண நலம் பெற்று நீடூடி வாழ வேண்டும்.…

ByBySenthil KumarJul 24, 2025

ஏழை தொழிலாளர்களை மூளைச்சலவை செய்து கிட்னியை பறித்து, கிட்னி மோசடி விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு உரிய தன்டனை வழங்க வேண்டி அறிக்கை

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் விசைத் தறி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். ஏழை தொழிலாளர்களை குறிவைத்து, புரோக்கர்கள் மூலம் மூளைச்சலவை செய்து, கிட்னி விற்பனை பல…

ByBySenthil KumarJul 22, 2025

கடலூர் மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டி அறிக்கை

கடலூர் மாவட்டம், கொடுக்கன்பாளையம், பெத்தான்குப்பம், மலையடிகுப்பம், வானமாதேவி, கட்டாரசாவடி, ஆகிய கிராமங்களில் இரண்டாயிரத்திற்கும் (2,000) மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்கு சுமார் 170…

ByBySenthil KumarJul 19, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...