Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • பகுதி நேர ஆசிரியர்களுக்குப் பொங்கல் போனஸ் வழங்கவும், திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன் படி பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும்அறிக்கை

பகுதி நேர ஆசிரியர்களுக்குப் பொங்கல் போனஸ் வழங்கவும், திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன் படி பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும்அறிக்கை

தமிழக அரசின் பொங்கல் போனஸ் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் கிடைக்க முதல்வர் உறுதி செய்ய வேண்டும். 2012 ஆம் ஆண்டு வேலைக்குச் சேர்ந்த பகுதிநேர ஆசிரியர்களுக்குக் கடந்த 12 ஆண்டுகளாகவும் பொங்கல் போனஸ் வழங்கப்படாமல் உள்ளதற்கு தேமுதிக கண்டிக்கிறது. 13 ஆண்டுகளாக பணிபுரிகின்ற பகுதிநேர ஆசிரியர்களுக்கு இந்த முறையாவது பொங்கல் போனஸ் வழங்கத் தமிழக முதல்வரை தேமுதிக சார்பில் வலியுறுத்துகிறேன். இந்த பொங்கல் போனஸ் தொகையைத் தமிழ்நாடு அரசு நிதியிலிருந்து தான் வழங்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது அதனைத் தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி கற்பித்துத் தருகின்ற பகுதிநேர ஆசிரியர்களுக்கும் கிடைக்கப் பள்ளிக் கல்வித்துறையின் அமைச்சர் நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். ஆனால் இந்த கோரிக்கையை கண்டுகொள்ளாமல் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கைவிட்டதால் தான் ஒருமுறைகூட போனஸ் பகுதிநேர ஆசிரியர்களுக்குக் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. தொகுப்பூதியத்தில் பணிபுரிகின்ற முழு நேர மற்றும் பகுதி நேர பணியாளர்களுக்குப் பொங்கல் போனஸ் கிடைக்கும் போது, அதைப் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் கிடைக்கச் செய்வது தான் நியாயம் ஆகும். தற்போது ₹12,500 ரூபாய் சம்பளம் தான் பகுதிநேர ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது. குறைந்த சம்பளம் இந்த காலத்தில் போதுமா என்பதைத் தமிழக முதல்வர் அவர்கள் நினைத்துப் பார்த்து, பகுதிநேர ஆசிரியர்களுக்குத் தேர்தலின்போது கொடுத்த பணி நிரந்தரம் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். மேலும் தொகுப்பூதியம் முறையை கைவிட்டு, காலமுறை சம்பளம் வழங்கப்பட்டால் தான் தற்போதுள்ள 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கும். எனவே பொங்கல் போனஸ் வழங்குவதோடு, பணிநிரந்தரம் செய்து பகுதிநேர ஆசிரியர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கத் தமிழக அரசை தேமுதிக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

Releated Posts

டாக்டர் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் அவர்களின் 69-ஆம் ஆண்டு *நினைவு நாளை முன்னிட்டு தேமுதிக பத்திரிகை செய்தி

டாகடர் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் அவர்களின் 69-ஆம் ஆண்டு *நினைவு நாளை முன்னிட்டு இன்று (06.12.2025) சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை…

ByBySenthil KumarDec 6, 2025

முதுபெரும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி

முதுபெரும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் (86) வயது மூப்பின் காரணமாகக் காலமானார் என்கிற செய்தி வேதனை அளிக்கிறது.  கேப்டனின்  மிகச் சிறந்த நண்பர். கேப்டன்…

ByBySenthil KumarDec 4, 2025

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அறிக்கை

உலகமெங்கும் டிசம்பர் 3ஆம் நாள் மாற்றுத் திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. நம் உறவினர்களாக வாழும் மாற்றுத் திறனாளிகளுக்கு  இயற்கையினால் ஏற்பட்ட குறைபாட்டை நிவர்த்திக்க உதவ…

ByBySenthil KumarDec 4, 2025

தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியேற்றி, நிவாரண உதவியும் வழங்க வேண்டி அறிக்கை

தமிழகம் முழுவதும் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தனிக் கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட…

ByBySenthil KumarDec 1, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...