Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தேமுதிக வறுமை ஒழிப்பு தின நல உதவிகள் -பத்திரிக்கை செய்தி – 24.08.2025

தேமுதிக வறுமை ஒழிப்பு தின நல உதவிகள் -பத்திரிக்கை செய்தி – 24.08.2025

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளான, ஆகஸ்ட் 25-யை “வறுமை ஒழிப்பு தினமாக” தேமுதிக கடைப்பிடித்து வருகிறது. வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்று (24.08.2025) *புரட்சி அண்ணியார் கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்* அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் *சுயதொழில் செய்ய தள்ளுவண்டி, இஸ்திரி பெட்டி (அயன் இயந்திரம்), தையல் இயந்திரம், இட்லி குண்டான் (இட்லி கடை வைப்பதற்கு) மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர நாற்காலி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையும், அதேப்போல் ராமாபுரம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு ஆண்டுதோறும் வழங்குவதுபோல, மதிய உணவு மற்றும் நிதியுதவியாக ரூ.50 ஆயிரம் இந்த ஆண்டும் வழங்கப்பட்டது. மேலும் புதுடெல்லியில் உள்ள டெல்லி தமிழ் சங்கத்திற்கு ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவியாக 1 இலட்சம்* காசோலை வழங்கப்பட்டது.

       வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் (கேப்டன் ஆலயம்) இயன்றதை செய்வோம் இல்லாதவரக்கே என்ற கொள்கைப்படி பல்வேறு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இரத்ததான முகாம் மற்றும் மருத்துவ முகாமில் இன்று (24.08.2025)கலந்து கொண்டு பயன்பெற்றனர்.உடன் கழக அவைத்தலைவர் திரு.டாக்டர்.வி.இளங்கோவன் அவர்கள், கழக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள், கழக இளைஞர் அணி செயலாளர் திரு.வி.விஜய் பிரபாகர் அவர்கள், கழக தலைமை நிலையச் செயலாளர் திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA., அவர்கள், கழக கொள்கை பரப்பு செயலாளர் திரு.ஆர்.மோகன்ராஜ்,Ex:MLA., அவர்கள், கழக துணைச் செயலாளர்கள் திரு.எம்.ஆர்.பன்னீர்செல்வம் அவர்கள், திரு.SSS.U.சந்திரன் அவர்கள், திருமதி.சுபா ரவி,Ex:MLA., அவர்கள், மற்றும் கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

Releated Posts

தொடர் மின்வெட்டால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிப்பு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவி வரும் மின்வெட்டு காரணமாக, விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு போதிய நீர்…

ByBySenthil KumarJun 12, 2026

மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் தமிழகம் முழுவதும் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டுடை கண்டித்து அறிக்கை

நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கமும், விலைவாசி உயர்வும் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மீண்டும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டரின் விலையை…

ByBySenthil KumarJun 8, 2026

உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்து அறிக்கை

இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதமான பூமியைக் காப்பது நம் அனைவரின் தலையாய கடமையாகும். ஒவ்வொருவரும் தங்களது மனதில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உறுதிமொழியை ஏற்க வேண்டும்.…

ByBySenthil KumarJun 5, 2026

காட்டு யானை தாக்குதலில் 14 வயது சிறுவன் பலிபொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை – 03.06.2026

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள பாக்கனா பகுதியில் முடிதிருத்தம் செய்து விட்டு, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த 14 வயது சிறுவன் மிஸ்ஹாப்…

ByBySenthil KumarJun 3, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...