Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தேமுதிக மே தின விழா பத்திரிக்கை செய்தி

தேமுதிக மே தின விழா பத்திரிக்கை செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (01.05.2025) காலை 11 மணிக்கு கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் மே தினத்தை முன்னிட்டு தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவையின் கொடி ஏற்றி நிர்வாகிகளுடன் மே தினத்தை கொண்டாடினார்கள். தொழிற்சங்கத்தின் நலிவடைந்த தொழிலாளர்களுக்கு ஆட்டோ தொழிலாளர்களுக்கு காக்கி சீருடைகள் வழங்கினார். மேலும் தொழிலாளர்களுக்கு உணவு அளித்து விழாவை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் கழக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள், தலைமை நிலையச் செயலாளர் திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA., கழக துணைச் செயலாளர்கள் திரு. எம்.ஆர்.பன்னீர்செல்வம், அவர்கள், திரு.SSS.U.சந்திரன் அவர்கள், கழக இளைஞர் அணி செயலாளர் திரு.வி.விஜயபிரபாகர் அவர்கள், தொழிற்சங்க பேரவை செயலாளர் திரு.G.காளிராஜன், தொழிற்சங்க பேரவை தலைவர்கள் திரு.பொன்.இளங்கோவன், தொழிற்சங்க பேரவை பொருளாளர் திரு.P.வேணுராம், தொழிற்சங்க பேரவை துணைச் தலைவர்கள் திரு.K.V.பாலாஜி,B.Com., தொழிற்சங்க பேரவை துணைச் செயலாளர்கள் திரு.S.முருகராஜ்,M.A.,B.L., திரு.ரா.ஜெயபால் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள், கழக உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், மகளிர் அணியினர், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

Releated Posts

தொடர் மின்வெட்டால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிப்பு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவி வரும் மின்வெட்டு காரணமாக, விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு போதிய நீர்…

ByBySenthil KumarJun 12, 2026

மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் தமிழகம் முழுவதும் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டுடை கண்டித்து அறிக்கை

நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கமும், விலைவாசி உயர்வும் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மீண்டும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டரின் விலையை…

ByBySenthil KumarJun 8, 2026

உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்து அறிக்கை

இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதமான பூமியைக் காப்பது நம் அனைவரின் தலையாய கடமையாகும். ஒவ்வொருவரும் தங்களது மனதில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உறுதிமொழியை ஏற்க வேண்டும்.…

ByBySenthil KumarJun 5, 2026

காட்டு யானை தாக்குதலில் 14 வயது சிறுவன் பலிபொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை – 03.06.2026

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள பாக்கனா பகுதியில் முடிதிருத்தம் செய்து விட்டு, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த 14 வயது சிறுவன் மிஸ்ஹாப்…

ByBySenthil KumarJun 3, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...