இறைத் தூதர் நபிகள் நாயகத்தால் போற்றப்பட்ட ரமலான் நோன்பு என்பது இஸ்லாம் மார்க்கத்தில் ஒரு புனிதமான கடமையாகும். புனித ரமலான் மாதத்தில் சூரிய உதயம் முதல் மறையும் வரை உண்ணாமல், பருகாமல் இறை சிந்தனையுடன் இருப்பது. சுயக்கட்டுப்பாட்டையும் ஏழைகளின் பசியைப் உணர்ந்து கொள்ளும் தன்மையையும் வளர்க்கிறது. இந்த இனிய நன்னாளில் மக்கள் தங்களிடையே உள்ள வேற்றுமையை போக்கி, ஒற்றுமையை வளர்த்து, மனிதநேயம் மலரவும், நாடு வளம் பெறவும், நோய் நொடி இல்லாமல் வாழவும், போர் சூழல் நிலவும் இந்த நிலையில் உலகம் முழுவதும் வாழும் மக்கள் அனைவரும் மனநிம்மதியுடனும் பாதுகாப்புடனும் சந்தோஷத்துடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன். அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் எனது இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.





