Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துச் செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துச் செய்தி

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு கிறிஸ்து அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் பெருவிழாவாக உலகம் முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். ஜாதி, மதங்களின் பெயரால் மனிதர்களுக்குள் வெறுப்பை வளர்க்கக் கூடாது என்றும், பகைவரிடத்திலும் அன்பு காட்ட வேண்டும் என்றும், அன்பும், அறமும் தான் மனிதநேயத்தின் அடிப்படை என்றும், இருப்பதை இல்லாதவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் மக்களுக்கு போதித்தவர் இயேசு பிரான் ஆவார். இந்த இனிய கிறிஸ்துமஸ் தின நன்னாளில், மக்கள் அனைவரும் ஒற்றுமையோடும், அமைதியோடும், நிம்மதியோடும், மகிழ்ச்சியோடும் கிறிஸ்துமஸ் பெருவிழாவை தங்கள் உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். தன்னலமற்ற சேவையாற்றும் மனப்பாங்கை கிறிஸ்துமஸ் நமக்கு கற்றுத் தருகிறது. இந்த புனித நாளில் அன்பையும், அமைதியும், நமக்கு போதித்த இயேசு பிரான் அவர்களை பிரார்த்திப்போம் வணங்குவோம். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

Releated Posts

தேமுதிக வறுமை ஒழிப்பு தின நல உதவிகள் – பத்திரிக்கை செய்தி – 24.08.2026

*தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பத்மபூஷன்* *கேப்டன் விஜயகாந்த்* அவர்களின் பிறந்த நாளான, ஆகஸ்ட் 25-யை *”வறுமை ஒழிப்பு தினமாக”* தேமுதிக கடைப்பிடித்து…

ByBySenthil KumarAug 24, 2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின விழாவை நாம் சிறப்பாகக் கொண்டாடும் இந்த நன்னாளிலே, நம் தாய்நாட்டின் விடுதலைக்காகத் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த…

ByBySenthil KumarAug 14, 2026

கரூர் சிறுமி பாலியல் வன்கொடுமை முயற்சியை தடுத்து நிறுத்திய பாட்டிக்கு பாராட்டு

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள நான்கு வயது, 9 வயது, சிறுமிகள், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய பல முறை முயற்ச்சி செய்த அந்த…

ByBySenthil KumarAug 14, 2026

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 ராமநாதபுரம் மீனவர்கள் உள்ளிட்ட கைது செய்யபட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி அறிக்கை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களையும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது.…

ByBySenthil KumarAug 14, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...