தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், பொதுச்செயலாளர் புரட்சி அண்ணியார் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் பெருந்தலைவர் காமராஜரின் 123வது பிறந்தநாளையொட்டி இன்று (15.07.2025) (கேப்டன் ஆலயம்) தலைமை கழகத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் கழக தலைமை நிலைய செயலாளர் திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA., அவர்கள், தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், வட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் பலரும் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.



