Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • திருநெல்வேலி மாவட்டத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் சக மாணவர்களுக்கு இடையில் பென்சிலை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட பிரச்சனையால் அரிவாளால் வெட்டியதை கண்டித்து அறிக்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் சக மாணவர்களுக்கு இடையில் பென்சிலை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட பிரச்சனையால் அரிவாளால் வெட்டியதை கண்டித்து அறிக்கை

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு பகிலும் மாணவன் சக மாணவனுடன் பென்சில் வாங்குவதில் தகராறு ஏற்பட்டு அரிவாளால் வெட்டிய செய்தி அனைவரையும் மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. மாணவர்களின் பெற்றோர்களும் பள்ளிக்கு சென்று வாக்குவாதம் செய்து, தங்கள் பிள்ளைகளை வீட்டுக்கு அனுப்புமாறு தகராறில் ஈடுபட்டிருக்கிறார்கள், தமிழ்நாட்டில் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்குது. மேலும் திருநெல்வேலியில் அரிவாளால் வெட்டுவது சர்வ சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது. இதற்கு மிக முக்கிய காரணம் பள்ளியில் ஒழுக்கத்தையும், கல்வியையும் பயில வேண்டிய இடத்தில் அரிவாள் வெட்டு கலாச்சாரத்தில் ஈடுபடுவது வன்மையாக கண்டிக்க கூடியது. மேலும் உடனடியாக தமிழக அரசும், காவல்துறையும் இந்த விஷயத்தில் அந்த மாணவனுக்கு உரிய தண்டனை கொடுத்து, இனி இதுபோன்று நடக்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் தமிழக அரசு இனிமேல் அனைத்து பள்ளிகளிலும் “நல் ஒழுக்கம்” என்ற ஒரு பாடத்திட்டத்தை செயல்படுத்தி, எதிர்கால குழந்தைகளுடைய வாழ்க்கைக்கு அறிவுரை செய்து, இதுபோன்று அரிவாள் கலாச்சாரத்திலிருந்து அவர்களை மீட்டெடுக்க வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள், காவல்துறை மற்றும் தமிழக அரசு இணைந்து செயல்பட்டு மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிவு பாதையில் இருந்து காத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

Releated Posts

மாநகராட்சியின் அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு நிவாரணம் நிதி வழங்க வேண்டி அறிக்கை

சென்னை திருவொற்றியூரில் தாங்கல் பீர் பயில்வான் தர்கா ரோடு பகுதியில் மின்சாரம் தாக்கி 12ஆம் வகுப்பு பள்ளி மாணவன் திரு.நஃபில் உயிரிழந்துள்ளார். டியூஷன் (Tuition)…

ByBySenthil KumarJul 3, 2025

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் உலக மருத்துவர்கள் தின வாழ்த்துக்கள்

மருத்துவர்களின்  வரலாற்றில்,   மறக்க    முடியாத     நாள்   இன்று (01-07-2025) மருத்துவர்கள் தினம்! மருத்துவத்துறையில் முன்மாதிரியான மாநிலமாகத் திகழும் நமது தமிழ்நாட்டில், அரசு மருத்துவர்களுக்குக் குறைவான…

ByBySenthil KumarJul 1, 2025

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு மரணமடைந்ததை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு மரணமடைந்ததை கண்டித்து வரும் (05.07.2025) சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வெள்ளிச் சந்தை திடலில் சனிக்கிழமை…

ByBySenthil KumarJul 1, 2025

“மா” (மாம்பழம்) விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

“மா” (மாம்பழம்) விளைச்சல் செய்யும் விவசாயிகளுக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. தமிழக அரசை கண்டித்து வரும் (30.06.2025) திங்கள் கிழமை காலை 10 மணியளவில் கிருஷ்ணகிரி புதிய…

ByBySenthil KumarJun 23, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...