Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் வளர்க்கப்பட்ட யானை தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்குத் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டி அறிக்கை

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் வளர்க்கப்பட்ட யானை தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்குத் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டி அறிக்கை

கடந்த 18.11.2024 அன்று திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் வளர்க்கப்படும் தெய்வானை (வயது 26) என்ற யானை தாக்கி திருச்செந்தூர் வஉசி நகரைச் சேர்ந்த திரு.சதாசிவம் மகன் திரு.உதயகுமார் (45) என்ற உதவி பாகனும், அவரை காண வந்திருந்த அவரது உறவினர் கன்னியாகுமரி (மேற்கு) மாவட்டம், பலுகல் பகுதியைச் சேர்ந்த திரு.கிருஷ்ணன் நாயர் மகன் திரு.சிசுபாலன் (வயது 58) என்பவரும் உயிரிழந்துள்ளார். திரு.உதயகுமார் மற்றும் திரு.சிசுபாலன் ஆகியோர்களுக்கு தமிழ்நாடு அரசாங்கம் இதுவரை இழப்பீடு எதுவும் வழங்கவும் இல்லை, அறிவிக்கவும் இல்லை. மேலும் இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகளோ, அமைச்சர்களோ யானை தாக்கி உயிரிழந்த திரு.உதயகுமார் மற்றும் திரு.சிசுபாலன் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவில்லை. எனவே உதயகுமார் மற்றும் சிசுபாலன் ஆகியோருக்கு பெரும் தொகையை நிவாரணமாக உடனடியாக வழங்க வேண்டும் எனத் தமிழக அரசையும், இந்து சமய அறநிலையத்துறையையும் கேட்டுக்கொள்கிறேன்.

Releated Posts

LIC பெண் அதிகாரி கல்யாணி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டி அறிக்கை

மதுரை மேலவெளி வீதியில், ரயில் நிலையம் எதிரில் அமைந்துள்ள இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக (LIC) கட்டிடத்தின் அலுவலகத்தில், 20.12.2025 அன்று இரவு ஏற்பட்ட…

ByBySenthil KumarJan 21, 2026

முன்னாள் கழக தொண்டர் அணி செயலாளரும், கழக தேர்தல் பணிக்குழு செயலாளருமான திரு.S.கணேசன் அவர்களின் மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள், கழக முன்னாள் தொண்டர் அணி செயலாளரும், கழக தேர்தல்…

ByBySenthil KumarJan 19, 2026

தேமுதிக – பத்திரிக்கை செய்தி – 17.01.2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், புரட்சி அண்ணியார், கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (17.01.2026) தலைமை கழகத்தில் (கேப்டன் ஆலயம்)…

ByBySenthil KumarJan 17, 2026

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு வாழ்த்துச் செய்தி

“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற நம்பிக்கையுடன், தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கும் என்ற உறுதியோடு, தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை நாம் அனைவரும்…

ByBySenthil KumarJan 14, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...