Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தமிழக அரசு உயர்த்த இருக்கும் சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டி அறிக்கை

தமிழக அரசு உயர்த்த இருக்கும் சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டி அறிக்கை

சென்னையில் அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து ஆண்டுதோறும் 6 சதவீதம் சொத்து வரியை மீண்டும் உயர்த்தும் முடிவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். ஏற்கனவே உயர்த்தப்பட்ட சொத்து வரி, மின் கட்டண உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு என்று பல்வேறு கட்ட விலை உயர்வுகள், அது மட்டுமல்லாமல் சாலை வரி (Road Tax) ஜிஎஸ்டி (GST) என பலவிதமான வரிகளை மக்கள் சந்தித்து வரும் நிலையில், மக்கள் வருமானத்துக்கு வழி இல்லாமல் வரிகள் மட்டும் செலுத்தும் நிலையுள்ளது. எனவே விலைவாசி உயர்வை தமிழக அரசு மீண்டும் மீண்டும் உயர்த்துவது மக்கள் மீது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று வாழ்க்கையே இன்றைக்கு கேள்விக்குறியாக உள்ளது. மீண்டும் சென்னையில் சொத்து வரி உயர்வு என்பது கண்டிக்கத்தக்கது, திமுக மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியது இன்னும் நிறைய உள்ளது. சாலை வசதி, வேலை வாய்ப்பு, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து கவனம் செலுத்த வேண்டிய அரசு, சொத்து வரியை உயர்த்துவதால் மக்களின் எதிர்ப்பை தான் பெற முடியுமே தவிர, உயர்த்த இருக்கும் சொத்து வரி உயர்வு எந்த வகையிலும் பயன் அளிக்காது. எனவே உயர்த்த இருக்கும் சொத்து வரியை பரிசீலனை செய்து திமுக அரசு இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

Releated Posts

LIC பெண் அதிகாரி கல்யாணி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டி அறிக்கை

மதுரை மேலவெளி வீதியில், ரயில் நிலையம் எதிரில் அமைந்துள்ள இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக (LIC) கட்டிடத்தின் அலுவலகத்தில், 20.12.2025 அன்று இரவு ஏற்பட்ட…

ByBySenthil KumarJan 21, 2026

முன்னாள் கழக தொண்டர் அணி செயலாளரும், கழக தேர்தல் பணிக்குழு செயலாளருமான திரு.S.கணேசன் அவர்களின் மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள், கழக முன்னாள் தொண்டர் அணி செயலாளரும், கழக தேர்தல்…

ByBySenthil KumarJan 19, 2026

தேமுதிக – பத்திரிக்கை செய்தி – 17.01.2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், புரட்சி அண்ணியார், கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (17.01.2026) தலைமை கழகத்தில் (கேப்டன் ஆலயம்)…

ByBySenthil KumarJan 17, 2026

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு வாழ்த்துச் செய்தி

“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற நம்பிக்கையுடன், தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கும் என்ற உறுதியோடு, தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை நாம் அனைவரும்…

ByBySenthil KumarJan 14, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...