Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தமிழகத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் அவலநிலை குறித்து அறிக்கை

தமிழகத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் அவலநிலை குறித்து அறிக்கை

தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் வீடு இல்லாதவர்களுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்டம் மூலம் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும் என அரசு தெரிவித்தது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் அனைத்து கிராமப் பகுதிகளில் இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கு மொத்த தொகையாக மூன்று லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கப்பட்டது. இதில் கழிப்பறை கட்டுவதற்காக 12 ஆயிரம் ரூபாயும், மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் கீழ் (NGNRGS) பணி செய்யும் நபருக்கு 314 ரூபாய் விதம் 90 நாட்களுக்கு 28 ஆயிரத்து 260 ரூபாயும், மீதமுள்ள மூன்று லட்சத்தி பத்தாயிரம் ரூபாய் 4 கட்டங்களாக வீடு கட்டும் நபருக்கு கொடுக்கப்படும். இவ்வாறு கட்டப்படக்கூடிய வீடுகளுக்கு முதல் கட்டப் பணி முடிந்த உடன், வரவு, செலவு கணக்குகளை ஒப்படைத்தவுடன் நிதி ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் மூன்றாவது கட்ட பணி முடிந்த பின்னும், முதல் கட்ட பணிக்கான பில்லுகளுக்கான தொகையினை கொடுக்காமல் தாமதப்படுத்துகிறார்கள். இது வாங்குவதற்கு பல பிரச்சனைகளை சந்திக்கும் அவல நிலை உள்ளது. சென்ற அதிமுக ஆட்சி காலத்தில் ஏழை, எளிய மக்கள் எளிதில் பயன்படக்கூடிய அளவில் அம்மா சிமெண்ட் மிகவும் குறைந்த விலையில் விற்கப்பட்டது. அனைத்து மக்களும் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தற்போது அதே சிமெண்ட் 285 ரூபாய்க்கு வாங்கி கட்ட வேண்டிய அவல நிலை உள்ளது. சில தனியார் சிமெண்ட் மூட்டைகள் இந்தத் தொகைக்கும் கீழ் கிடைப்பதால், அதை வாங்கி பயன்படுத்தினால் பணம் கொடுக்க மாட்டோம் என புறக்கணிக்கிறார்கள். கலைஞரின் கனவு இல்ல திட்டத்திற்கு அரசு சிமெண்ட் பயன்படுத்துவதால் சிமெண்டின் விலை மற்ற சிமெண்ட்களை காட்டிலும் குறைவாக இருந்தால் அனைத்து பொதுமக்களும் பயன்படும் வகையில் அமையும். எனவே அரசு உடனடியாக சிமெண்டின் விலையை குறைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அதேபோல் இத்திட்டத்தின் கீழ் வீடு கட்டும் ஏழை, எளிய மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கட்டுமான தொகைக்காக பில்லுகளோடு பல நாட்கள் அலைய விடுவது மிகவும் மோசமான செயலாகும். பொதுமக்கள் சிரமம் இல்லாமல் வீடு கட்டி குடியேற கலைஞரின் கனவு இல்லத்திட்டம் உதவும் வகையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மெத்தன போக்கை கைவிட்டு, உடனே நிதியினை ஒதுக்கி மக்களின் சிரமத்தை குறைக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வெறும் வாக்குறுதிகளை மட்டும் அளித்து விட்டு அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கடுமையாக கண்டிப்பதுடன். இந்த நிதியின் மூலம் பொதுமக்கள் எந்த சிரமமும் இல்லாமல் வீடு கட்டி குடியேற இந்த அரசு ஆவணம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

Releated Posts

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் உலக மருத்துவர்கள் தின வாழ்த்துக்கள்

மருத்துவர்களின்  வரலாற்றில்,   மறக்க    முடியாத     நாள்   இன்று (01-07-2025) மருத்துவர்கள் தினம்! மருத்துவத்துறையில் முன்மாதிரியான மாநிலமாகத் திகழும் நமது தமிழ்நாட்டில், அரசு மருத்துவர்களுக்குக் குறைவான…

ByBySenthil KumarJul 1, 2025

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு மரணமடைந்ததை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு மரணமடைந்ததை கண்டித்து வரும் (05.07.2025) சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வெள்ளிச் சந்தை திடலில் சனிக்கிழமை…

ByBySenthil KumarJul 1, 2025

“மா” (மாம்பழம்) விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

“மா” (மாம்பழம்) விளைச்சல் செய்யும் விவசாயிகளுக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. தமிழக அரசை கண்டித்து வரும் (30.06.2025) திங்கள் கிழமை காலை 10 மணியளவில் கிருஷ்ணகிரி புதிய…

ByBySenthil KumarJun 23, 2025

“மா” (மாம்பழம்) விளைச்சல் செய்யும் விவசாயிகளுக்கு தமிழக அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டி அறிக்கை – 20.06.2025

தமிழகத்தில் இந்த (2025) ஆண்டு ‘மா’ (மாம்பழம்) விளைச்சல் அதிகமாக இருந்தாலும், அதற்கான விலை மிக, மிக குறைவாக இருப்பதால், விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதேபோல் தர்பூசணி…

ByBySenthil KumarJun 20, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...