டாகடர் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் அவர்களின் 69-ஆம் ஆண்டு *நினைவு நாளை முன்னிட்டு இன்று (06.12.2025) சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழக அலுவலகத்தில் (கேப்டன் ஆலயம்) புரட்சி அண்ணியார் கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். மேலும் இந்த நிகழ்ச்சியில், தலைமை நிலையச் செயலாளர் திரு.ப.பாரத்தசாரதி,Ex:MLA., அவர்கள், கழக துணைச் செயலாளர்கள் திரு.M.R.பன்னீர்செல்வம் அவர்கள், திரு.SSS.U.சந்திரன் அவர்கள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக அணி நிர்வாகிகள், சென்னை மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்களும் கலந்து கொண்டு டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.






