சென்னையில் சமீபமாக ஏழு இடங்களில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவம், கொள்ளையில் ஈடுபட்ட இரானி கொள்ளையர்கள் செயின் பறிப்பு செய்த சிறிது நேரத்திலேயே கைது செய்து என்கவுண்டர் செய்தது பாராட்டுக்குரிய ஒன்றாகும். எனவே சென்னை மாநகர காவல் ஆணையர் திரு.ஏ.அருண் அவர்கள் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து கொள்ளையர்களைக் கைது செய்தது மிகவும் பாராட்டுக்குரியது. மேலும் இனி வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதற்கு இந்த முயற்சி உண்மையிலேயே வரவேற்கத்தக்கது. அதேபோல் தமிழகம் முழுவதும் இருக்கின்ற அனைத்து வித சட்டம் ஒழுங்கு பிரச்சனையையும் கட்டுக்குள் கொண்டு வந்து, மிகச்சிறந்த முறையில் காவல்துறை பணியாற்ற வேண்டும். ஸ்காட்லாண்ட் யார்டு காவல் துறைக்கு இணையாக செயல்பட்ட நமது காவல் துறை மீண்டும் இரானி கொள்ளையர்களைக் கைது செய்து என்கவுண்டர் செய்ததைத் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
