Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • சாராய விற்பனையை தடுக்க முயன்ற கல்லூரி மாணவர்களை படுகொலை செய்தவர்களுக்கு குற்றம் நிரூபணம் ஆனவுடன் மரண தண்டனை வழங்க வேண்டி அறிக்கை

சாராய விற்பனையை தடுக்க முயன்ற கல்லூரி மாணவர்களை படுகொலை செய்தவர்களுக்கு குற்றம் நிரூபணம் ஆனவுடன் மரண தண்டனை வழங்க வேண்டி அறிக்கை

மயிலாடுதுறை மாவட்டம், முட்டம் கிராமத்தில், சாராய விற்பனையைத் தடுக்க முயன்ற எஞ்சினியரிங் கல்லூரி மாணவர்கள் இருவர், சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. படுகொலை செய்யப்படுவது என்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சம்பவங்கள் சமூகத்திற்கு தவறான முன் உதாரணமாக அமையும். ஏற்கனவே சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொல்லப்பட்டதோடு, இப்போது இந்த இரு இளைஞர்களும் மதுவிற்பனையைத் தடை செய்யக்கோரி, தட்டிக் கேட்டதற்காகக் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இது நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டவுடன், அவர்களுக்குக் மரண தண்டனை வழங்க வேண்டும். குறிப்பாக, இனி இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க, தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையும் சட்டம், ஒழுங்கை உறுதிபடுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இந்தக் கொடூர சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர்களின் ஆன்மா சாந்தியடைய, அவர்களின் குடும்பத்தினருக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Releated Posts

தேமுதிக கழக துணைச் செயலாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்களின் 28 ஆம் ஆண்டு திருமண நாள் வாழ்த்து செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்களை இன்று (05.03.2025) கழக துணைச் செயலாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள் திருமதி.எஸ்.பூர்ணஜோதி…

ByBySenthil KumarMar 7, 2025

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் உலக மகளிர் தின வாழ்த்து செய்தி

சமுதாயத்தில் சரிபாதி அங்கமாக பெண்கள் திகழ்கிறார்கள். பெண்கள் தாயாகவும், தாரமாகவும், சகோதரிகளா இருந்து, தொண்டுக்கும், தியாகத்திற்கும் இலக்கணமாக தங்கள் வாழ்வை அர்பணித்து கொள்கிறார்கள். அவர்கள்…

ByBySenthil KumarMar 7, 2025

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குத் தமிழக அரசு நிவாரண தொகை அறிவித்ததற்கு வரவேற்பு தெரிவித்து  அறிக்கை

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாய பெருமக்களுக்குத் தமிழக அரசு நிவாரணத் தொகை அறிவித்தது வரவேற்கத்தக்கது. மொத்தம் 5,18,783 விவசாயிகள் பயன்பெறும் வகையில் 498.80 கோடி…

ByBySenthil KumarFeb 19, 2025

தேசிய கல்விக் கொள்கை மற்றும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்காததை கண்டித்து அறிக்கை

தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் ஏற்றுக்கொள்ளாதவரை அதற்கான நிதியை வழங்க முடியாது என்று மத்திய அமைச்சர் கூறி இருப்பது கண்டனத்திற்குரியது. தமிழகத்தை பொறுத்தவரைக்கும் இரு…

ByBySenthil KumarFeb 16, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...