Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி அறிக்கை

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி அறிக்கை

சபரிமலைக்கு மாலை அணிவித்து பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் செல்லும் பக்தர்களுக்கு கனிம வள லாரிகள் விபத்துக்களை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. கார்த்திகை மாதம் தொடங்கி இரண்டு, மூன்று நாட்களில் வாகன விபத்துகள் அதிக இடத்தில் நடந்திருக்கின்றன. இரண்டு மாதங்களுக்கு கனிம வள லாரிகள் செல்வதை உடனடியாக தமிழக அரசு தடை செய்ய வேண்டும். சபரிமலையில் கூட்ட நெரிசலில் இன்றைக்கு ஒரு பெண் பலியாகியுள்ளார். குழந்தைகளும் கூட்ட நெரிசலில் சிக்கி சிரமப்படுகிறார்கள். இதையெல்லாம் தேவஸ்தானம் முறைப்படுத்தி பக்தர்கள் வந்து செல்ல பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.  சபரிமலைக்கு சென்று வருபவர்களுக்கு போக்குவரத்து நெரிசல்கள் இல்லாமலும், விபத்துகள் ஏற்படாமலும் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்று தமிழக அரசை தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.   

Releated Posts

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தனியார் பேருந்து விபத்தில் உயிரிழந்த 6 பேர்க்கு இரங்கல் செய்தி

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்தில் 5 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த செய்தியறிந்து…

ByBySenthil KumarNov 25, 2025

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திரு.தர்மேந்திரா அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திரு.தர்மேந்திரா (89) வயது மூப்பின் காரணமாகச் மும்பையில் காலமானார் என்கிற செய்தி வேதனை அளிக்கிறது.  கேப்டனுக்கு பிடித்த ஒரு நடிகர்…

ByBySenthil KumarNov 24, 2025

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் அறிக்கை

குழந்தைகள் நம்முடைய எதிர்காலம் மட்டுமல்ல; அவர்கள் நம் சமுதாயத்தின் உயிரும் ஒளியும். குழந்தைகளுக்கு எதிரான எந்தவிதமான பாலியல் வன்கொடுமையும் மனிதநேயத்துக்கே எதிரான கொடூர குற்றமாகும்.…

ByBySenthil KumarNov 19, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...