தமிழக முதல்வர் அண்ணன் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் சகோதரர் திரு.கு.செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் அண்ணன் திரு.வைகோ அவர்கள், காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவர் திரு.SM.இதயத்துல்லா அவர்கள், SDPI கட்சி தலைவர் திரு.முகமது முபாரக் அவர்கள், பாஜக முன்னாள் ஆளுநரும் எனது தோழியுமான திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் அன்பு சகோதரர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்கள், மற்றும் பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் தொண்டரணி நிர்வாகிகள், மகளிர் அணி சகோதரிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் தமிழகம் முழுவதும் அன்னதானம் வழங்கி சிறப்புப் பூஜைகளும் செய்து, இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே என்ற கேப்டன் வழியில் மக்களுக்கு உதவும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கி பிறந்தநாள் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடிய தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைச் சேர்ந்த அனைவருக்கும், திரையுலகினர், பத்திரிகை சகோதரர்கள் மற்றும் நேரில் வந்தும் தொலைபேசியிலும், சமூகவலைதளத்திலும், பத்திரிக்கை விளம்பரம் செய்தும் பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் தெரிவித்தவர்களுக்கும், பொதுமக்களுக்கும் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எல்லா புகழும் எங்கள் கேப்டனுக்கே!.








