Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • கடலூர் மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டி அறிக்கை

கடலூர் மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டி அறிக்கை

கடலூர் மாவட்டம், கொடுக்கன்பாளையம், பெத்தான்குப்பம், மலையடிகுப்பம், வானமாதேவி, கட்டாரசாவடி, ஆகிய கிராமங்களில் இரண்டாயிரத்திற்கும் (2,000) மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்கு சுமார் 170 ஏக்கரில் முந்திரி விவசாயம் 200 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வருகிறார்கள். மேலும் முந்திரி மரங்கள் மற்றும் பனை மரங்களை அழித்துவிட்டு, (காலணிகள்) தொழிற் பூங்கா [NON LEATHER FOOT WEAR PARK) அமைக்க போவதாக தமிழக அரசு அறிவித்து, தனியார் தொழிற்சாலைக்கு தாரைவார்க்கும் நோக்கில் பத்துக்கும் மேற்பட்ட ராட்சத இயந்திரங்களுடன் அகற்றி வருகிறார்கள். இதை வன்மையாக கண்டிப்பதுடன், அங்கு தனியார் தொழிற்சாலை அமைப்பதற்காக முதலமைச்சர் அவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த இடத்திற்கு தொழிற்சாலை வந்தால் இங்கிருந்து கடலூர் மாநகரத்திற்கு ஆதாரமாக இருக்கும் குடிநீர் மாசுபடும் நிலை ஏற்படும். அதுமட்டுமின்றி அங்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பனை மரங்கள் பாதிக்கப்படும். மேலும் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு, நிலத்தடி நீர் வீணாகி அதைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்படும். இதனால் சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்தும் மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாக மாறிவிடும். எனவே தமிழக அரசு இந்தத் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என தேமுதிக சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

Releated Posts

LIC பெண் அதிகாரி கல்யாணி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டி அறிக்கை

மதுரை மேலவெளி வீதியில், ரயில் நிலையம் எதிரில் அமைந்துள்ள இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக (LIC) கட்டிடத்தின் அலுவலகத்தில், 20.12.2025 அன்று இரவு ஏற்பட்ட…

ByBySenthil KumarJan 21, 2026

முன்னாள் கழக தொண்டர் அணி செயலாளரும், கழக தேர்தல் பணிக்குழு செயலாளருமான திரு.S.கணேசன் அவர்களின் மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள், கழக முன்னாள் தொண்டர் அணி செயலாளரும், கழக தேர்தல்…

ByBySenthil KumarJan 19, 2026

தேமுதிக – பத்திரிக்கை செய்தி – 17.01.2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், புரட்சி அண்ணியார், கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (17.01.2026) தலைமை கழகத்தில் (கேப்டன் ஆலயம்)…

ByBySenthil KumarJan 17, 2026

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு வாழ்த்துச் செய்தி

“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற நம்பிக்கையுடன், தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கும் என்ற உறுதியோடு, தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை நாம் அனைவரும்…

ByBySenthil KumarJan 14, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...