Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • கடலூர் மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டி அறிக்கை

கடலூர் மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டி அறிக்கை

கடலூர் மாவட்டம், கொடுக்கன்பாளையம், பெத்தான்குப்பம், மலையடிகுப்பம், வானமாதேவி, கட்டாரசாவடி, ஆகிய கிராமங்களில் இரண்டாயிரத்திற்கும் (2,000) மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்கு சுமார் 170 ஏக்கரில் முந்திரி விவசாயம் 200 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வருகிறார்கள். மேலும் முந்திரி மரங்கள் மற்றும் பனை மரங்களை அழித்துவிட்டு, (காலணிகள்) தொழிற் பூங்கா [NON LEATHER FOOT WEAR PARK) அமைக்க போவதாக தமிழக அரசு அறிவித்து, தனியார் தொழிற்சாலைக்கு தாரைவார்க்கும் நோக்கில் பத்துக்கும் மேற்பட்ட ராட்சத இயந்திரங்களுடன் அகற்றி வருகிறார்கள். இதை வன்மையாக கண்டிப்பதுடன், அங்கு தனியார் தொழிற்சாலை அமைப்பதற்காக முதலமைச்சர் அவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த இடத்திற்கு தொழிற்சாலை வந்தால் இங்கிருந்து கடலூர் மாநகரத்திற்கு ஆதாரமாக இருக்கும் குடிநீர் மாசுபடும் நிலை ஏற்படும். அதுமட்டுமின்றி அங்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பனை மரங்கள் பாதிக்கப்படும். மேலும் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு, நிலத்தடி நீர் வீணாகி அதைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்படும். இதனால் சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்தும் மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாக மாறிவிடும். எனவே தமிழக அரசு இந்தத் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என தேமுதிக சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

Releated Posts

முன்னாள் பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை அவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கழகப் பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்களின் தாயார் திருமதி.K.அம்சவேணி கண்ணையா அவர்கள் திருவுருவப் படத்திற்கு…

ByBySenthil KumarOct 9, 2025

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர்திருமதி.பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கழகப் பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்களின் தாயார் திருமதி.K.அம்சவேணி கண்ணையா அவர்கள் மறைவிற்கு நேரிலும், தொலைபேசியிலும், சமூக வலைத்தளங்களின் மூலம் அஞ்சலிசெலுத்திய அனைவருக்கும் நன்றி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கழகப் பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்களின் தாயார் திருமதி.K.அம்சவேணி கண்ணையா அவர்கள் மறைவிற்கு தொலைப்பேசியில்…

ByBySenthil KumarOct 9, 2025

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை காணாத கரூர் அரசியல் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்  அறிக்கை 

கரூர் மாவட்டத்தில், தவெக தலைவர் விஜய் பரப்புரையில் கலந்துகொண்ட பொதுமக்கள் இதுவரை 29 பேர் உயிரிழந்த செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. 40க்கும் மேற்பட்டவர்கள்…

ByBySenthil KumarSep 30, 2025

கோவை கோட்டைபாளையம் தனியார் காப்பகத்தில் குழந்தைகளுக்கு நடந்த கொடுமை தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை  

கோவை மாவட்டம், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தின் கோட்டைபாளையம் பகுதியில் இயங்கும் “கிரேஸ் ஹேப்பி ஹோம் டிரஸ்ட்” என்ற தனியார் குழந்தைகள் காப்பகத்தில் பணிபுரியும் ஊழியர்…

ByBySenthil KumarSep 30, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...