Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • கடலூர் மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டி அறிக்கை

கடலூர் மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டி அறிக்கை

கடலூர் மாவட்டம், கொடுக்கன்பாளையம், பெத்தான்குப்பம், மலையடிகுப்பம், வானமாதேவி, கட்டாரசாவடி, ஆகிய கிராமங்களில் இரண்டாயிரத்திற்கும் (2,000) மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்கு சுமார் 170 ஏக்கரில் முந்திரி விவசாயம் 200 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வருகிறார்கள். மேலும் முந்திரி மரங்கள் மற்றும் பனை மரங்களை அழித்துவிட்டு, (காலணிகள்) தொழிற் பூங்கா [NON LEATHER FOOT WEAR PARK) அமைக்க போவதாக தமிழக அரசு அறிவித்து, தனியார் தொழிற்சாலைக்கு தாரைவார்க்கும் நோக்கில் பத்துக்கும் மேற்பட்ட ராட்சத இயந்திரங்களுடன் அகற்றி வருகிறார்கள். இதை வன்மையாக கண்டிப்பதுடன், அங்கு தனியார் தொழிற்சாலை அமைப்பதற்காக முதலமைச்சர் அவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த இடத்திற்கு தொழிற்சாலை வந்தால் இங்கிருந்து கடலூர் மாநகரத்திற்கு ஆதாரமாக இருக்கும் குடிநீர் மாசுபடும் நிலை ஏற்படும். அதுமட்டுமின்றி அங்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பனை மரங்கள் பாதிக்கப்படும். மேலும் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு, நிலத்தடி நீர் வீணாகி அதைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்படும். இதனால் சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்தும் மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாக மாறிவிடும். எனவே தமிழக அரசு இந்தத் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என தேமுதிக சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

Releated Posts

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தனியார் பேருந்து விபத்தில் உயிரிழந்த 6 பேர்க்கு இரங்கல் செய்தி

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்தில் 5 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த செய்தியறிந்து…

ByBySenthil KumarNov 25, 2025

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திரு.தர்மேந்திரா அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திரு.தர்மேந்திரா (89) வயது மூப்பின் காரணமாகச் மும்பையில் காலமானார் என்கிற செய்தி வேதனை அளிக்கிறது.  கேப்டனுக்கு பிடித்த ஒரு நடிகர்…

ByBySenthil KumarNov 24, 2025

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் அறிக்கை

குழந்தைகள் நம்முடைய எதிர்காலம் மட்டுமல்ல; அவர்கள் நம் சமுதாயத்தின் உயிரும் ஒளியும். குழந்தைகளுக்கு எதிரான எந்தவிதமான பாலியல் வன்கொடுமையும் மனிதநேயத்துக்கே எதிரான கொடூர குற்றமாகும்.…

ByBySenthil KumarNov 19, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...