Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • என் உயிரினும் மேலான அன்பு கழக உடன்பிறப்புகளே நடக்க இருக்கும் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.O கடலூர் மாவட்டம், பாசார் கிராமத்தில் நடக்க இருக்கிறது. அதற்காக தலைமைக் கழகத்தின் சார்பாக கேப்டன் அவர்களின் ஆசீர்வாதத்துடன் ஒரு கடிதம் உங்களுக்காக அனுப்பி வைத்திருக்கிறேன்.

என் உயிரினும் மேலான அன்பு கழக உடன்பிறப்புகளே நடக்க இருக்கும் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.O கடலூர் மாவட்டம், பாசார் கிராமத்தில் நடக்க இருக்கிறது. அதற்காக தலைமைக் கழகத்தின் சார்பாக கேப்டன் அவர்களின் ஆசீர்வாதத்துடன் ஒரு கடிதம் உங்களுக்காக அனுப்பி வைத்திருக்கிறேன்.

நமது தலைவர் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்கள் இந்த கழகத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு ஆரம்பித்தார். கேப்டன் அவர்கள் கட்சியை ஆரம்பித்தபோது, மதுரையில் 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று 28 லட்சத்திற்கும் மேல் நமது நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்களின் பேராதரவோடு மிகப் பிரமாண்ட வெற்றி மாநாடு நடத்தி சரித்திர சாதனை படைத்திருக்கிறோம்.

நம் தலைவர் இல்லாமல் நாம் நடத்த இருக்கின்ற முதல் மாநாடு 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தும் மாநாடு இந்த மாநாட்டின் வெற்றி உங்கள் ஒவ்வொருவரின் வெற்றி. எனவே மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.O மாநாட்டிற்கு என் உயிரினும் மேலான அன்பு கழக உடன் பிறப்புகளே நீங்கள் அனைவரும் பெருந்திரளாக வந்து அதாவது ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டச் செயலாளர் தலைமையில் ஒன்றியம், நகரம், பேரூர், பகுதி, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி சகோதரிகள், தொண்டர் அணி சகோதரர்கள் மற்றும் தொண்டர்களும், ஒவ்வொரு கிராமத்திலிருந்தும், ஒவ்வொரு கிளைகளிலிருந்தும் பொதுமக்களையும் அழைத்து கொண்டு  இந்த மாநாட்டில் பெருவாரியாக கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன்.

 நமது நிர்வாகிகள் அனைவரும் ஒவ்வொரு இல்லமாக நேரடியாக சென்று வெற்றிலை, பாக்கோடு மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.O அழைப்பிதழ் கடிதத்தை கொடுத்து அனைவரையும் மாநாட்டிற்கு வரவேற்க வேண்டும்.

வரவிருக்கும் 2026 தேர்தல் வெற்றிக்கான அச்சாரமாக இந்த மாநாடு அமைய இருப்பதோடு  இந்த வெற்றி ஒவ்வொருவரின் வெற்றி என்பதை மனதில் கொண்டு ஒவ்வொரு ஊராட்சியிலும், கிளையிலும் பேனர்கள், கொடிகள் அமைத்து தமிழ்நாடு முழுக்க அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கடலூர் மாநாட்டில் பெருவாரியாக கலந்து கொள்ள வேண்டும்.

நன்றி வணக்கம்

“நல்லவர்கள் லட்சியம் வெல்வது நிச்சயம்” “நமது முரசு எட்டுத்திக்கும் வெற்றி முரசு கொட்டும்”

Releated Posts

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தனியார் பேருந்து விபத்தில் உயிரிழந்த 6 பேர்க்கு இரங்கல் செய்தி

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்தில் 5 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த செய்தியறிந்து…

ByBySenthil KumarNov 25, 2025

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திரு.தர்மேந்திரா அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திரு.தர்மேந்திரா (89) வயது மூப்பின் காரணமாகச் மும்பையில் காலமானார் என்கிற செய்தி வேதனை அளிக்கிறது.  கேப்டனுக்கு பிடித்த ஒரு நடிகர்…

ByBySenthil KumarNov 24, 2025

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் அறிக்கை

குழந்தைகள் நம்முடைய எதிர்காலம் மட்டுமல்ல; அவர்கள் நம் சமுதாயத்தின் உயிரும் ஒளியும். குழந்தைகளுக்கு எதிரான எந்தவிதமான பாலியல் வன்கொடுமையும் மனிதநேயத்துக்கே எதிரான கொடூர குற்றமாகும்.…

ByBySenthil KumarNov 19, 2025

காதலிக்க மறுத்த 12 ஆம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவத்தை கண்டித்து அறிக்கை

ராமேஸ்வரத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் காதலை நிராகரித்ததற்காக கொடூரமாக கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சியூட்டும் மனிதநேயமற்ற சம்பவமாகும். ஒரு…

ByBySenthil KumarNov 19, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...