Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • ஊராட்சி நிர்வாகத்தின் முதுகெலும்பான செயலாளர்களுக்கு நீதியளிக்க தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை

ஊராட்சி நிர்வாகத்தின் முதுகெலும்பான செயலாளர்களுக்கு நீதியளிக்க தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை

தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி நிர்வாகத்தின் முதுகெலும்பாக செயல்பட்டு வரும் ஊராட்சி செயலாளர்கள், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 2026 முதல் சென்னையில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவது வருத்தத்தையும் அதே நேரத்தில் நியாயமான போராட்டம் என்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது. 2018-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஊராட்சி செயலாளர்களுக்கு இதுவரை முறையான ஊதிய மாற்றம் வழங்கப்படாததும், பல ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் தொடர்ந்து தற்காலிக நிலைமையில் வைத்திருப்பதும் கடும் அநீதி ஆகும். அரசின் அனைத்து திட்டங்களையும் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் முக்கிய பொறுப்பு இவர்களிடமே இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டதற்காக வழங்கப்பட்ட சஸ்பெண்ட் உத்தரவுகள் ஆகியவை ஊராட்சி செயலாளர்களின் மன உறுதியை உடைக்கும் செயல். 2018-ல் நியமிக்கப்பட்டவர்களுக்கு உரிய ஊதிய விகித மாற்றத்தை வழங்கவும். அனைவருக்கும் பணி நிரந்தரம் மற்றும் ஓய்வூதிய பலன்களை உறுதி செய்யவும். போராட்ட காலத்தில் விதிக்கப்பட்ட அனைத்து ஒழுக்க நடவடிக்கைகளையும், சஸ்பெண்ட் உத்தரவுகளையும் உடனடியாக ரத்து செய்து, ஊராட்சி செயலாளர்களின் 12 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசை தேமுதிக சார்பாக வலியுறுத்துகிறோம். ஊராட்சி செயலாளர்களின் இந்த நியாயமான போராட்டத்திற்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் முழு ஆதரவு அளிப்பதுடன், அவர்கள் உரிமைகள் பெறப்படும் வரை தொடர்ந்து துணை நிற்கும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம்.

Releated Posts

பேரறிஞர் அண்ணாவின் அவர்களின் 57-வது நினைவுநாளை முன்னிட்டு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், (கேப்டன் ஆலயம்) தலைமை கழகத்தில், கழக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள் பேரறிஞர் அண்ணாவின் அவர்களின் 57-வது நினைவுநாளை முன்னிட்டு…

ByBySenthil KumarFeb 3, 2026

பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமை தொடரும் அவலம் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் உணவகத்தில் பணியாற்றி வந்த 22 வயது பெண்ணை, அங்கு வேலை செய்து வந்த உணவக…

ByBySenthil KumarJan 30, 2026

LIC பெண் அதிகாரி கல்யாணி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டி அறிக்கை

மதுரை மேலவெளி வீதியில், ரயில் நிலையம் எதிரில் அமைந்துள்ள இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக (LIC) கட்டிடத்தின் அலுவலகத்தில், 20.12.2025 அன்று இரவு ஏற்பட்ட…

ByBySenthil KumarJan 21, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...