Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • அரசு ஊழியர்களுக்குப் பாதுகாப்பு வழங்கத் தவறிய ஆளும் அரசைக் கண்டித்து அறிக்கை

அரசு ஊழியர்களுக்குப் பாதுகாப்பு வழங்கத் தவறிய ஆளும் அரசைக் கண்டித்து அறிக்கை

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் திரு.ரமணி அவர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம் என்ற அவல நிலை நிலவி வரும் அளவுக்கு, நிர்வாகச் சீர்கேடு இந்த ஆட்சியில் நிலவுகிறது. எனவே சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக மாறியுள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் அரசுக்குச் சொந்தமான இடங்களில் கூட பாதுகாப்பு துளியும் இல்லாதது மிகவும் கண்டனத்திற்குரியது. அதேபோல் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் பொய்யாமொழி நேரடியாகச் சென்று ஆய்வு செய்து, அரசுப் பள்ளிகளில் நடக்கும் அவலத்தை உடனடியாக சீர்படுத்த வேண்டும். பள்ளிகளில் ஏற்படும் இந்த அவலங்கள் அந்த துறைக்கே மிகப்பெரிய வெட்கக்கேடாக அமைந்துள்ளது.

Releated Posts

திருவேற்காடு நகராட்சியில் கோலடிகிராமத்தில் மக்கள் வாழும் பகுதியில் அமையவுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டி அறிக்கை

திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட கோலடி கிராமத்தின் வார்டு 4, சின்னக்கோலடி பகுதியில் வசித்து வரும் கோலடி கிராமம், சர்வே எண். 22, 23, 24 அடங்கிய சுமார் 14 ஏக்கர் பரப்பளவு கொண்ட…

ByBySenthil KumarMay 30, 2025

பீளமேடு பகுதி விளாங்குறிச்சி சாலையில் புதிதாக குப்பை தரம் பிரிக்கும் கிடங்கு அமைய உள்ளதை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டி அறிக்கை

கோவை மாநகர் மாவட்டம், பீளமேடு பகுதி 26வது வார்டு விளாங்குறிச்சி சாலையில் அமைந்துள்ள இந்து மயானத்தில் புதிதாக அமைய உள்ள குப்பை கிடங்கு தரம் பிரிப்பு மையத்திலிருந்து…

ByBySenthil KumarMay 28, 2025

பட்டினி தினம் மற்றும் தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்பது குறித்து அறிக்கை

பட்டினி தினம் என்று ஒருநாள் எப்போதும் இருக்கக் கூடாது. இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம் உறுதி…

ByBySenthil KumarMay 28, 2025

தலைமை ஹாஜி சலாஹூதீன் முஹம்மத் அய்யூப் சாஹிப் அவர்கள்மறைவிற்கு இரங்கல் செய்தி

தமிழ்நாடு அரசின் மாநில தலைமை ஹாஜி சலாஹூதீன் முஹம்மத் அய்யூப் சாஹிப் அவர்களின் வயது 84. வயது மூப்பு காரணமாக, உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று (சனிக்கிழமை)…

ByBySenthil KumarMay 25, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...