Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு முதலமைச்சர் பதில் தர வேண்டி அறிக்கை

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு முதலமைச்சர் பதில் தர வேண்டி அறிக்கை

அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பாலியல் பலாத்கார துயர சம்பவம் குறித்து முதலமைச்சர் இதுவரை பதிலளிக்காதது ஏன்?. அண்ணா பல்கலைக்கழகத்தில் திடீரென்று சிசிடிவி கேமராக்கள் பழுதானது ஏன்?, இச்சம்பவத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என அமைச்சர் மன்றாடியது ஏன்?. மாணவர்கள் போராட்டம் நடத்தும் வரை குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்யாதது ஏன்?. அனைத்து கேள்விகளுக்கும் ஒரே விடை கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர் திமுகவைச் சேர்ந்தவரா? என்பதை மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். மிக முக்கியமான கல்லூரியிலேயே இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள் நடக்கும் பொழுது இங்கு படிக்கும் மாணவிகளுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது. ஆர்ப்பாட்டம் செய்பவர்களை மட்டும் அடக்குவதால், மாணவிக்கு நடந்த கொடூரம் இல்லை என்று ஆகிவிடாது. எனவே ஜனநாயக ரீதியாக கேள்விகள் கேட்பவர்களுக்கும், போராடுபவர்களுக்கும், இந்த அரசு உரிய பதில் அளிக்க வேண்டும். அந்த மாணவிக்கு ஏற்பட்டது போல் இனி எந்த மாணவிகளுக்கும், பெண்களுக்கும் இதுபோன்ற நிலை ஏற்படாத வண்ணம் இந்த அரசு பாதுகாத்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

Releated Posts

டாக்டர் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் அவர்களின் 69-ஆம் ஆண்டு *நினைவு நாளை முன்னிட்டு தேமுதிக பத்திரிகை செய்தி

டாகடர் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் அவர்களின் 69-ஆம் ஆண்டு *நினைவு நாளை முன்னிட்டு இன்று (06.12.2025) சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை…

ByBySenthil KumarDec 6, 2025

முதுபெரும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி

முதுபெரும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் (86) வயது மூப்பின் காரணமாகக் காலமானார் என்கிற செய்தி வேதனை அளிக்கிறது.  கேப்டனின்  மிகச் சிறந்த நண்பர். கேப்டன்…

ByBySenthil KumarDec 4, 2025

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அறிக்கை

உலகமெங்கும் டிசம்பர் 3ஆம் நாள் மாற்றுத் திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. நம் உறவினர்களாக வாழும் மாற்றுத் திறனாளிகளுக்கு  இயற்கையினால் ஏற்பட்ட குறைபாட்டை நிவர்த்திக்க உதவ…

ByBySenthil KumarDec 4, 2025

தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியேற்றி, நிவாரண உதவியும் வழங்க வேண்டி அறிக்கை

தமிழகம் முழுவதும் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தனிக் கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட…

ByBySenthil KumarDec 1, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...