Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வழக்கில் 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை வழங்கிய தீர்ப்பை வரவேற்று அறிக்கை – 02.06.2025

அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வழக்கில் 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை வழங்கிய தீர்ப்பை வரவேற்று அறிக்கை – 02.06.2025

அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் தாக்குதல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை விதித்தது வரவேற்கத்தக்கது. இனிவரும் காலங்களில் யாரும் இதுபோன்று தவறு செய்யாமல் இருக்க இந்த தண்டனைகள் வழிவகுக்கும். நல்ல தீர்ப்பு வழங்கிய நீதி அரசர்களுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இனி வரும் காலங்களில் இந்த தீர்ப்பு இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. மேலும் இந்தக் குற்றத்திற்கு பின்புலத்திலிருந்து ஞானசேகரனை இயக்கியது யார்?, இதற்கு பின் எவ்வளவு அரசியல் சக்தி கொண்ட பின்புலம் இருப்பவர்களாக இருந்தாலும், அவர்களையும் நீதியரசர்கள் கண்டறிந்து அவர்களுக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டும். அப்போது தான் இந்த வழக்கில் மிகப்பெரிய வெற்றியை நாம் அடைந்ததாக அர்த்தம்.

Releated Posts

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் உலக மருத்துவர்கள் தின வாழ்த்துக்கள்

மருத்துவர்களின்  வரலாற்றில்,   மறக்க    முடியாத     நாள்   இன்று (01-07-2025) மருத்துவர்கள் தினம்! மருத்துவத்துறையில் முன்மாதிரியான மாநிலமாகத் திகழும் நமது தமிழ்நாட்டில், அரசு மருத்துவர்களுக்குக் குறைவான…

ByBySenthil KumarJul 1, 2025

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு மரணமடைந்ததை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு மரணமடைந்ததை கண்டித்து வரும் (05.07.2025) சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வெள்ளிச் சந்தை திடலில் சனிக்கிழமை…

ByBySenthil KumarJul 1, 2025

“மா” (மாம்பழம்) விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

“மா” (மாம்பழம்) விளைச்சல் செய்யும் விவசாயிகளுக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. தமிழக அரசை கண்டித்து வரும் (30.06.2025) திங்கள் கிழமை காலை 10 மணியளவில் கிருஷ்ணகிரி புதிய…

ByBySenthil KumarJun 23, 2025

“மா” (மாம்பழம்) விளைச்சல் செய்யும் விவசாயிகளுக்கு தமிழக அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டி அறிக்கை – 20.06.2025

தமிழகத்தில் இந்த (2025) ஆண்டு ‘மா’ (மாம்பழம்) விளைச்சல் அதிகமாக இருந்தாலும், அதற்கான விலை மிக, மிக குறைவாக இருப்பதால், விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதேபோல் தர்பூசணி…

ByBySenthil KumarJun 20, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...