Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • அடக்குமுறையை கைவிட்டு நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டி அறிக்கை

அடக்குமுறையை கைவிட்டு நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டி அறிக்கை

சமூக நலப்பணியாளர்கள், செவிலியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களின் அடிப்படை வாழ்க்கைத் தேவைகள் மற்றும் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து தீர்வு காண வேண்டிய ஆளும் அரசு, அதற்கு மாறாக காவல்துறையின் மூலம் அதிரடியாக கைது நடவடிக்கைகளை மேற்கொள்வது கடும் கண்டனத்திற்குரியது. போராட்டம் என்பது ஜனநாயகத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமை. அந்த உரிமையை பயன்படுத்தி தங்களின் வாழ்வாதார பிரச்சனைகளை முன்வைக்கும் உழைப்பாளிகளை கைது செய்வது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் ஆகும். கைது செய்வதை விட, அவர்களின் வாழ்க்கைக்கு உண்மையில் என்ன தேவை என்பதை உணர்ந்து, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை ஆகும். திடீர் திடீர் கைது நடவடிக்கைகள் மூலம் போராட்டங்களை அடக்க முயல்வது ஜனநாயக விரோத செயலாகும். கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இனிவரும் காலங்களில் இதுபோன்ற அடக்குமுறை நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும் எனவும் தேமுதிக சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

Releated Posts

தேமுதிக கிருஸ்துமஸ் விழா செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கேப்டன் ஆலயம் தலைமைக் கழகத்தில் இன்று (25.12.2025) புரட்சி அண்ணியார் கழகப் பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த்…

ByBySenthil KumarDec 25, 2025

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துச் செய்தி

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு கிறிஸ்து அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் பெருவிழாவாக உலகம் முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். ஜாதி, மதங்களின் பெயரால் மனிதர்களுக்குள் வெறுப்பை…

ByBySenthil KumarDec 24, 2025

தந்தை பெரியார் – புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு – தேமுதிக – பத்திரிக்கை செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், (கேப்டன் ஆலயம்) தலைமை கழகத்தில், *புரட்சி அண்ணியார்* *கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்* அவர்கள் தந்தை பெரியார் அவர்களின்…

ByBySenthil KumarDec 24, 2025

செவிலியர்களின் பணி நிரந்தர கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டி அறிக்கை

சென்னையில், பணி நிரந்தர கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஆயிரக்கணக்கான செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாழ்வாதார உரிமைகளுக்காகப் போராடும் செவிலியர்களை அழைத்துப் பேசி,…

ByBySenthil KumarDec 20, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...