Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • மதுரை முழுவதும் தண்ணீர் தேங்கி குடியிருப்புகளைச் சூழ்ந்ததால் மக்கள் பெரும் பாதிப்பு உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை வேண்டி அறிக்கை

மதுரை முழுவதும் தண்ணீர் தேங்கி குடியிருப்புகளைச் சூழ்ந்ததால் மக்கள் பெரும் பாதிப்பு உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை வேண்டி அறிக்கை

மதுரையில் வரலாறு காணாத கனமழை பெய்ததினால் மதுரை முழுவதும் தண்ணீர் தேங்கி குடியிருப்புகளைச் சூழ்ந்த வெள்ளம் மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்து இருக்கின்றது. தண்ணீர் உடனடியாக வடிவதற்கு வைகை ஆறு மற்றும் குளங்கள் இயற்கையாகவே அமைந்திருக்கும் மதுரையில் இந்த அளவு தண்ணீர் தேங்க வேண்டியதன் காரணம் என்ன? கண்மாய், ஓடைகள் முறையாகத் தூர்வாராமல் இருந்ததினாலே ஆலங்குளம் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு அதனைச் சுற்றியுள்ள பகுதிகளாகிய பீபிகுளம், செல்லூர் போன்ற பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. பெரும் மழையாக இருந்தாலும் ஓரிரு நாள் மழைக்கே ஏன் இந்த அளவு பாதிப்பு என்பதனை ஆராய்ந்து மதுரை மாநகராட்சி மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். உடனடியாக மாநகராட்சியும், அதிகாரிகளும் களத்தில் இறங்கிப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய உணவு, உடை, மருந்து மாத்திரைகள், தங்குவதற்கான இடம் கொடுத்து அவர்களைப் பாதுகாத்துத் தேங்கி இருக்கின்ற தண்ணீரை உடனடியாக அப்புறப்படுத்தி நோய் பரவாமல் தடுத்துப் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடியாக உதவிகளைச் செய்து இந்த மழைக் காலத்தில் காக்க வேண்டியது இந்த அரசின் கடமை. ஓரிரு நாள் மழைக்கே ஏன் இந்த அளவு பாதிப்பு என்பதனை மதுரை மாநகராட்சியும், தமிழக அரசும் விளக்கம் தரவேண்டும் என தேமுதிக சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.

Releated Posts

ரத்தன் பண்டிட் அவர்களை அரசு பணியில் நியமித்ததை ரத்து செய்த தமிழக முதலமைச்சர் திரு.விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

தமிழக முதலமைச்சர் திரு.விஜய் அவர்களுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாகவும், கேப்டன் அவர்களின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஜோதிடர் ரத்தன்…

ByBySenthil KumarMay 13, 2026

பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதிய மற்றும்  வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ – மாணவிகளுக்கும் வாழ்த்துகள்

பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி, அதில் தங்களின் அர்ப்பணிப்பாலும் கடின உழைப்பாலும் சிறந்த மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்ற அனைத்து மாணவ…

ByBySenthil KumarMay 8, 2026

திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே நேற்று (05.05.2026) நிகழ்ந்த வாகன விபத்தில் அவர் உயிரிழந்தார் என்கிற செய்தி…

ByBySenthil KumarMay 7, 2026

மதச்சார்பற்ற வெற்றி கூட்டணியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

மதச்சார்பற்ற வெற்றி கூட்டணி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.…

ByBySenthil KumarMay 5, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...