Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டி அறிக்கை

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டி அறிக்கை

மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்க்க தமிழகத்திற்கு உரிமை இல்லை என்று கர்நாடக துணை முதலமைச்சர் திரு.டி.கே.சிவகுமார் தெரிவித்திருப்பதை தேமுதிக கடுமையாக கண்டிக்கிறது. தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீர் பங்கை கேட்கும் முழு உரிமையும் தமிழகத்திற்கு உள்ளது. காவிரி நீர் பிரச்சனை ஏற்கனவே நீண்டகாலமாக தொடர்ந்து வரும் முக்கியமான பிரச்சனையாக இருந்து வருகிறது. இதற்கு இதுவரை நிரந்தர தீர்வு கிடைக்காத நிலையில், மேகதாது அணை திட்டம் தமிழக விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே, மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு, மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்தி, தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், தமிழக முதலமைச்சர் உடனடியாக கர்நாடக அரசுடனும், மத்திய அரசுடனும், கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி, மேகதாது அணை கட்டும் திட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டை வடிகாலாக பயன்படுத்தும் வகையில் கர்நாடக அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது. தமிழக மக்களின் உரிமைகளையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், இந்த விவகாரம் இரு மாநிலங்களுக்கிடையேயான மிகப்பெரிய பிரச்சனையாக பூதாகரமாக வெடிக்கும் அபாயம் உருவாகும் நிலை உள்ளது. அந்த சூழ்நிலையை தவிர்க்க மத்திய அரசும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். “கொடுத்ததெல்லாம் கொடுத்தான்; யாருக்குக் கொடுத்தான்? ஒரு மாநிலத்திற்கா கொடுத்தான்? இல்லை, தமிழகத்திற்கும் கொடுத்தான். தண்ணீர் என்பது இயற்கை அது பொது சொத்து அனைவருக்கும் சமமானது. அந்தத் தண்ணீரைக் கேட்கவும் பயன்படுத்தவும் தமிழக மக்களுக்கும் விவசாயிகளுக்கும் முழு உரிமை உள்ளது. எனவே, மேகதாது அணை கட்டும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்.”

Releated Posts

அரசு மருத்துவமனையில் தவறான மருத்துவ சிக்கிசையால் செவிலியர் கல்லூரி மாணவி உயிரிழப்பை கண்டித்து அறிக்கை

திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த செவிலியர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி சீதாலட்சுமி…

ByBySenthil KumarMay 23, 2026

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை  கண்டித்து அறிக்கை

கோவை மாவட்டம், சூலூர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்ற நிலையில், வெகுநேரமாகியும்…

ByBySenthil KumarMay 23, 2026

கேப்டன் காட்டிய பாதையில் வெற்றியை நோக்கி தொடர்ந்து பயணிப்போம்

அனைத்து மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரின் விருப்பப்படி மதச்சார்பற்ற வெற்றி கூட்டணியின் சார்பாக 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட…

ByBySenthil KumarMay 23, 2026

தமிழகத்தில் தொடர் மின்வெட்டுக்கு உடனடி தீர்வு காண அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் போன்ற மாவட்டங்களில், பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் மின்வெட்டு ஏற்பட்டிருப்பது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயமாகும்.…

ByBySenthil KumarMay 22, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...