Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமை தொடரும் அவலம் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமை தொடரும் அவலம் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் உணவகத்தில் பணியாற்றி வந்த 22 வயது பெண்ணை, அங்கு வேலை செய்து வந்த உணவக மாஸ்டர் மற்றும் மேலும் சிலர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கல்லூரி வளாகத்தில் ஒரு பெண்ணுக்கு நடந்த கொடுமை ஏற்புடையதல்ல. இந்த கொடூர சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள உணவக மாஸ்டர் உள்ளிட்ட குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும். அதேபோல், சென்னை தரமணியில் வேலை தேடி வந்த வடமாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பத்திற்கு நேர்ந்த சோகமான சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. கணவன், மனைவி மற்றும் 2 வயது குழந்தையுடன் வந்த கவுரவின் மனைவி, வடமாநிலத்தை சேர்ந்த கல்லூரி காவலாளி உள்ளிட்ட 5 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் மனிதத்தன்மையற்ற ஒரு கொடூரச் செயலாகும். கணவன் மற்றும் குழந்தையின் உடல்கள் சட்டலமாக கிடைத்த நிலையில், மனைவியின் உடல் தேடப்பட்டு வருவது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. இந்த அரக்கத்தனமான செயலை செய்த கயவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில், இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். சட்டம், ஒழுங்கை காக்க வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

Releated Posts

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டி அறிக்கை

மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்க்க தமிழகத்திற்கு உரிமை இல்லை என்று கர்நாடக துணை முதலமைச்சர் திரு.டி.கே.சிவகுமார் தெரிவித்திருப்பதை தேமுதிக கடுமையாக கண்டிக்கிறது. தமிழ்நாட்டிற்கு உரிய…

ByBySenthil KumarMay 25, 2026

அரசு மருத்துவமனையில் தவறான மருத்துவ சிக்கிசையால் செவிலியர் கல்லூரி மாணவி உயிரிழப்பை கண்டித்து அறிக்கை

திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த செவிலியர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி சீதாலட்சுமி…

ByBySenthil KumarMay 23, 2026

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை  கண்டித்து அறிக்கை

கோவை மாவட்டம், சூலூர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்ற நிலையில், வெகுநேரமாகியும்…

ByBySenthil KumarMay 23, 2026

கேப்டன் காட்டிய பாதையில் வெற்றியை நோக்கி தொடர்ந்து பயணிப்போம்

அனைத்து மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரின் விருப்பப்படி மதச்சார்பற்ற வெற்றி கூட்டணியின் சார்பாக 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட…

ByBySenthil KumarMay 23, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...