Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமை தொடரும் அவலம் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமை தொடரும் அவலம் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் உணவகத்தில் பணியாற்றி வந்த 22 வயது பெண்ணை, அங்கு வேலை செய்து வந்த உணவக மாஸ்டர் மற்றும் மேலும் சிலர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கல்லூரி வளாகத்தில் ஒரு பெண்ணுக்கு நடந்த கொடுமை ஏற்புடையதல்ல. இந்த கொடூர சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள உணவக மாஸ்டர் உள்ளிட்ட குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும். அதேபோல், சென்னை தரமணியில் வேலை தேடி வந்த வடமாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பத்திற்கு நேர்ந்த சோகமான சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. கணவன், மனைவி மற்றும் 2 வயது குழந்தையுடன் வந்த கவுரவின் மனைவி, வடமாநிலத்தை சேர்ந்த கல்லூரி காவலாளி உள்ளிட்ட 5 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் மனிதத்தன்மையற்ற ஒரு கொடூரச் செயலாகும். கணவன் மற்றும் குழந்தையின் உடல்கள் சட்டலமாக கிடைத்த நிலையில், மனைவியின் உடல் தேடப்பட்டு வருவது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. இந்த அரக்கத்தனமான செயலை செய்த கயவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில், இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். சட்டம், ஒழுங்கை காக்க வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

Releated Posts

ஊராட்சி நிர்வாகத்தின் முதுகெலும்பான செயலாளர்களுக்கு நீதியளிக்க தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை

தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி நிர்வாகத்தின் முதுகெலும்பாக செயல்பட்டு வரும் ஊராட்சி செயலாளர்கள், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்ட 12 அம்ச…

ByBySenthil KumarFeb 7, 2026

பேரறிஞர் அண்ணாவின் அவர்களின் 57-வது நினைவுநாளை முன்னிட்டு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், (கேப்டன் ஆலயம்) தலைமை கழகத்தில், கழக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள் பேரறிஞர் அண்ணாவின் அவர்களின் 57-வது நினைவுநாளை முன்னிட்டு…

ByBySenthil KumarFeb 3, 2026

LIC பெண் அதிகாரி கல்யாணி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டி அறிக்கை

மதுரை மேலவெளி வீதியில், ரயில் நிலையம் எதிரில் அமைந்துள்ள இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக (LIC) கட்டிடத்தின் அலுவலகத்தில், 20.12.2025 அன்று இரவு ஏற்பட்ட…

ByBySenthil KumarJan 21, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...