Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • பீளமேடு பகுதி விளாங்குறிச்சி சாலையில் புதிதாக குப்பை தரம் பிரிக்கும் கிடங்கு அமைய உள்ளதை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டி அறிக்கை

பீளமேடு பகுதி விளாங்குறிச்சி சாலையில் புதிதாக குப்பை தரம் பிரிக்கும் கிடங்கு அமைய உள்ளதை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டி அறிக்கை

கோவை மாநகர் மாவட்டம், பீளமேடு பகுதி 26வது வார்டு விளாங்குறிச்சி சாலையில் அமைந்துள்ள இந்து மயானத்தில் புதிதாக அமைய உள்ள குப்பை கிடங்கு தரம் பிரிப்பு மையத்திலிருந்து சுமார் 30 மீட்டர் அளவில் ஏற்கனவே குப்பை தரம் பிரிப்பு மையம் செயல்பட்டு வருகின்றது. அதிலிருந்து வரும் துர்நாற்றத்தால் பலரும் உடல் நலம் பாதிக்கப்பட்டு துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டு, மன உளைச்சலுடன் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள். இந்த பகுதியில் ஏறத்தாழ சுமார் 50 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். பீளமேடு பகுதியில் உள்ள மயானத்தில் கோவை மாநகராட்சியின் வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரிக்கும் ஒரு கிடங்கு அமைக்கின்ற பணிகள் கோவை மாநகராட்சியால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பீளமேடு குடியிருப்பு சங்கங்கள் மூலமாக கோரிக்கை மனுக்கள் பல்வேறு அதிகாரிகளுடன் ஏற்கனவே வழங்கப்பட்டு அது குறித்து எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை. பீளமேடு பகுதியில் புதிதாக மேற்கண்ட குப்பை தரம் பிரிக்கும் கிடங்கு அமைக்கப்பட்டால் ஏறத்தாழ 50 ஆயிரம் மக்களின் சுகாதாரம் என்பது, தற்பொழுதும், காலப்போக்கிலும் தொடர்ந்து சீர்கெடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனவே தற்போதைய தலைமுறையும், எதிர்காலத் தலைமுறையும் சுகாதார சீர்கேட்டால் பாதிக்கப்படாமல் இருக்க, மக்களுக்கு இடையூறு இல்லாதவாறு அமைக்க வேண்டும். பீளமேடு பகுதியில் உள்ள மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து, புதியதாக அமைய உள்ள குப்பை தரம் பிரிக்கும் கிடங்கினை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

Releated Posts

டாக்டர் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் அவர்களின் 69-ஆம் ஆண்டு *நினைவு நாளை முன்னிட்டு தேமுதிக பத்திரிகை செய்தி

டாகடர் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் அவர்களின் 69-ஆம் ஆண்டு *நினைவு நாளை முன்னிட்டு இன்று (06.12.2025) சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை…

ByBySenthil KumarDec 6, 2025

முதுபெரும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி

முதுபெரும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் (86) வயது மூப்பின் காரணமாகக் காலமானார் என்கிற செய்தி வேதனை அளிக்கிறது.  கேப்டனின்  மிகச் சிறந்த நண்பர். கேப்டன்…

ByBySenthil KumarDec 4, 2025

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அறிக்கை

உலகமெங்கும் டிசம்பர் 3ஆம் நாள் மாற்றுத் திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. நம் உறவினர்களாக வாழும் மாற்றுத் திறனாளிகளுக்கு  இயற்கையினால் ஏற்பட்ட குறைபாட்டை நிவர்த்திக்க உதவ…

ByBySenthil KumarDec 4, 2025

தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியேற்றி, நிவாரண உதவியும் வழங்க வேண்டி அறிக்கை

தமிழகம் முழுவதும் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தனிக் கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட…

ByBySenthil KumarDec 1, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...