தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (01.05.2025) காலை 11 மணிக்கு கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் மே தினத்தை முன்னிட்டு தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவையின் கொடி ஏற்றி நிர்வாகிகளுடன் மே தினத்தை கொண்டாடினார்கள். தொழிற்சங்கத்தின் நலிவடைந்த தொழிலாளர்களுக்கு ஆட்டோ தொழிலாளர்களுக்கு காக்கி சீருடைகள் வழங்கினார். மேலும் தொழிலாளர்களுக்கு உணவு அளித்து விழாவை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் கழக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள், தலைமை நிலையச் செயலாளர் திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA., கழக துணைச் செயலாளர்கள் திரு. எம்.ஆர்.பன்னீர்செல்வம், அவர்கள், திரு.SSS.U.சந்திரன் அவர்கள், கழக இளைஞர் அணி செயலாளர் திரு.வி.விஜயபிரபாகர் அவர்கள், தொழிற்சங்க பேரவை செயலாளர் திரு.G.காளிராஜன், தொழிற்சங்க பேரவை தலைவர்கள் திரு.பொன்.இளங்கோவன், தொழிற்சங்க பேரவை பொருளாளர் திரு.P.வேணுராம், தொழிற்சங்க பேரவை துணைச் தலைவர்கள் திரு.K.V.பாலாஜி,B.Com., தொழிற்சங்க பேரவை துணைச் செயலாளர்கள் திரு.S.முருகராஜ்,M.A.,B.L., திரு.ரா.ஜெயபால் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள், கழக உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், மகளிர் அணியினர், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.






