திரு.முரசொலி செல்வம் அவர்கள் இன்று (10.10.2024) வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகவும் துயரமடைந்தேன். கேப்டன் அவர்களுடன் நல்ல நட்புடன் பழகக் கூடியவர், அமைதியானவர், அன்பானவர் அவருடைய இழப்பு திமுகவிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பு. எனவே அவர்கள் குடும்பத்தாருக்கும், திமுகவினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
