Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • திருநெல்வேலி மாவட்டத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் சக மாணவர்களுக்கு இடையில் பென்சிலை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட பிரச்சனையால் அரிவாளால் வெட்டியதை கண்டித்து அறிக்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் சக மாணவர்களுக்கு இடையில் பென்சிலை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட பிரச்சனையால் அரிவாளால் வெட்டியதை கண்டித்து அறிக்கை

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு பகிலும் மாணவன் சக மாணவனுடன் பென்சில் வாங்குவதில் தகராறு ஏற்பட்டு அரிவாளால் வெட்டிய செய்தி அனைவரையும் மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. மாணவர்களின் பெற்றோர்களும் பள்ளிக்கு சென்று வாக்குவாதம் செய்து, தங்கள் பிள்ளைகளை வீட்டுக்கு அனுப்புமாறு தகராறில் ஈடுபட்டிருக்கிறார்கள், தமிழ்நாட்டில் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்குது. மேலும் திருநெல்வேலியில் அரிவாளால் வெட்டுவது சர்வ சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது. இதற்கு மிக முக்கிய காரணம் பள்ளியில் ஒழுக்கத்தையும், கல்வியையும் பயில வேண்டிய இடத்தில் அரிவாள் வெட்டு கலாச்சாரத்தில் ஈடுபடுவது வன்மையாக கண்டிக்க கூடியது. மேலும் உடனடியாக தமிழக அரசும், காவல்துறையும் இந்த விஷயத்தில் அந்த மாணவனுக்கு உரிய தண்டனை கொடுத்து, இனி இதுபோன்று நடக்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் தமிழக அரசு இனிமேல் அனைத்து பள்ளிகளிலும் “நல் ஒழுக்கம்” என்ற ஒரு பாடத்திட்டத்தை செயல்படுத்தி, எதிர்கால குழந்தைகளுடைய வாழ்க்கைக்கு அறிவுரை செய்து, இதுபோன்று அரிவாள் கலாச்சாரத்திலிருந்து அவர்களை மீட்டெடுக்க வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள், காவல்துறை மற்றும் தமிழக அரசு இணைந்து செயல்பட்டு மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிவு பாதையில் இருந்து காத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

Releated Posts

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டி அறிக்கை

மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்க்க தமிழகத்திற்கு உரிமை இல்லை என்று கர்நாடக துணை முதலமைச்சர் திரு.டி.கே.சிவகுமார் தெரிவித்திருப்பதை தேமுதிக கடுமையாக கண்டிக்கிறது. தமிழ்நாட்டிற்கு உரிய…

ByBySenthil KumarMay 25, 2026

அரசு மருத்துவமனையில் தவறான மருத்துவ சிக்கிசையால் செவிலியர் கல்லூரி மாணவி உயிரிழப்பை கண்டித்து அறிக்கை

திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த செவிலியர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி சீதாலட்சுமி…

ByBySenthil KumarMay 23, 2026

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை  கண்டித்து அறிக்கை

கோவை மாவட்டம், சூலூர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்ற நிலையில், வெகுநேரமாகியும்…

ByBySenthil KumarMay 23, 2026

கேப்டன் காட்டிய பாதையில் வெற்றியை நோக்கி தொடர்ந்து பயணிப்போம்

அனைத்து மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரின் விருப்பப்படி மதச்சார்பற்ற வெற்றி கூட்டணியின் சார்பாக 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட…

ByBySenthil KumarMay 23, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...