தமிழ்நாடு அரசின் மாநில தலைமை ஹாஜி சலாஹூதீன் முஹம்மத் அய்யூப் சாஹிப் அவர்களின் வயது 84. வயது மூப்பு காரணமாக, உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று (சனிக்கிழமை) இரவு 9 மணியளவில் அவர் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். சுமார் 40 வருடங்களாக தமிழக அரசு தலைமை ஹாஜியாக கவுரவ பொறுப்பு வகித்தவர், எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர் என்பதும் நினைவுகூறத்தக்கது. அவரை இழந்து வாடும் இஸ்லாமிய சொந்தங்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
