Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தமிழக அரசு உயர்த்த இருக்கும் சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டி அறிக்கை

தமிழக அரசு உயர்த்த இருக்கும் சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டி அறிக்கை

சென்னையில் அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து ஆண்டுதோறும் 6 சதவீதம் சொத்து வரியை மீண்டும் உயர்த்தும் முடிவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். ஏற்கனவே உயர்த்தப்பட்ட சொத்து வரி, மின் கட்டண உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு என்று பல்வேறு கட்ட விலை உயர்வுகள், அது மட்டுமல்லாமல் சாலை வரி (Road Tax) ஜிஎஸ்டி (GST) என பலவிதமான வரிகளை மக்கள் சந்தித்து வரும் நிலையில், மக்கள் வருமானத்துக்கு வழி இல்லாமல் வரிகள் மட்டும் செலுத்தும் நிலையுள்ளது. எனவே விலைவாசி உயர்வை தமிழக அரசு மீண்டும் மீண்டும் உயர்த்துவது மக்கள் மீது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று வாழ்க்கையே இன்றைக்கு கேள்விக்குறியாக உள்ளது. மீண்டும் சென்னையில் சொத்து வரி உயர்வு என்பது கண்டிக்கத்தக்கது, திமுக மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியது இன்னும் நிறைய உள்ளது. சாலை வசதி, வேலை வாய்ப்பு, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து கவனம் செலுத்த வேண்டிய அரசு, சொத்து வரியை உயர்த்துவதால் மக்களின் எதிர்ப்பை தான் பெற முடியுமே தவிர, உயர்த்த இருக்கும் சொத்து வரி உயர்வு எந்த வகையிலும் பயன் அளிக்காது. எனவே உயர்த்த இருக்கும் சொத்து வரியை பரிசீலனை செய்து திமுக அரசு இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

Releated Posts

ரத்தன் பண்டிட் அவர்களை அரசு பணியில் நியமித்ததை ரத்து செய்த தமிழக முதலமைச்சர் திரு.விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

தமிழக முதலமைச்சர் திரு.விஜய் அவர்களுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாகவும், கேப்டன் அவர்களின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஜோதிடர் ரத்தன்…

ByBySenthil KumarMay 13, 2026

பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதிய மற்றும்  வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ – மாணவிகளுக்கும் வாழ்த்துகள்

பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி, அதில் தங்களின் அர்ப்பணிப்பாலும் கடின உழைப்பாலும் சிறந்த மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்ற அனைத்து மாணவ…

ByBySenthil KumarMay 8, 2026

திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே நேற்று (05.05.2026) நிகழ்ந்த வாகன விபத்தில் அவர் உயிரிழந்தார் என்கிற செய்தி…

ByBySenthil KumarMay 7, 2026

மதச்சார்பற்ற வெற்றி கூட்டணியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

மதச்சார்பற்ற வெற்றி கூட்டணி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.…

ByBySenthil KumarMay 5, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...