Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தமிழக அரசு உயர்த்த இருக்கும் சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டி அறிக்கை

தமிழக அரசு உயர்த்த இருக்கும் சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டி அறிக்கை

சென்னையில் அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து ஆண்டுதோறும் 6 சதவீதம் சொத்து வரியை மீண்டும் உயர்த்தும் முடிவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். ஏற்கனவே உயர்த்தப்பட்ட சொத்து வரி, மின் கட்டண உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு என்று பல்வேறு கட்ட விலை உயர்வுகள், அது மட்டுமல்லாமல் சாலை வரி (Road Tax) ஜிஎஸ்டி (GST) என பலவிதமான வரிகளை மக்கள் சந்தித்து வரும் நிலையில், மக்கள் வருமானத்துக்கு வழி இல்லாமல் வரிகள் மட்டும் செலுத்தும் நிலையுள்ளது. எனவே விலைவாசி உயர்வை தமிழக அரசு மீண்டும் மீண்டும் உயர்த்துவது மக்கள் மீது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று வாழ்க்கையே இன்றைக்கு கேள்விக்குறியாக உள்ளது. மீண்டும் சென்னையில் சொத்து வரி உயர்வு என்பது கண்டிக்கத்தக்கது, திமுக மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியது இன்னும் நிறைய உள்ளது. சாலை வசதி, வேலை வாய்ப்பு, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து கவனம் செலுத்த வேண்டிய அரசு, சொத்து வரியை உயர்த்துவதால் மக்களின் எதிர்ப்பை தான் பெற முடியுமே தவிர, உயர்த்த இருக்கும் சொத்து வரி உயர்வு எந்த வகையிலும் பயன் அளிக்காது. எனவே உயர்த்த இருக்கும் சொத்து வரியை பரிசீலனை செய்து திமுக அரசு இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

Releated Posts

கஞ்சா போதை ஆசாமிகளால் படுகொலை செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் படுகொலையை கண்டித்து அறிக்கை

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டரின் டிரைவராக கள்ளப்பட்டியைச் சேர்ந்த போலீஸ்காரர் திரு.முத்துக்குமார் பணியாற்றி வந்தார். நாவலூர் பட்டியைச் சேர்ந்த பொன்வண்ணன் மற்றும் அவர்களின்…

ByBySenthil KumarMar 28, 2025

சென்னையில் செயின் பறிப்பு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை உடனடியாக கைது செய்த காவல் துறையை வரவேற்று அறிக்கை

சென்னையில் சமீபமாக ஏழு இடங்களில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவம், கொள்ளையில் ஈடுபட்ட இரானி கொள்ளையர்கள் செயின் பறிப்பு செய்த சிறிது நேரத்திலேயே கைது…

ByBySenthil KumarMar 27, 2025

தேமுதிக இஃதார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி பத்திரிக்கை செய்தி – 22.03.2025

“இஃதார் நோன்பு” திறப்பு நிகழ்ச்சி தேமுதிக தலைமை அலுவலகத்தில், இன்று (22.03.2025) மாலை 6.00 மணியளவில், தேமுதிக கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில்…

ByBySenthil KumarMar 22, 2025

பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் நன்றி

தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களுக்கும், அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், பாஜக மாநில தலைவர் திரு.அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் திருமதி.தமிழிசை…

ByBySenthil KumarMar 19, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...