தமிழ்நாடு முழுவதும் மக்கள் பிரச்சனைகளை முன் நிறுத்தி எதிர்க்கட்சிகள் போராடுகின்ற போது அனுமதி மறுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யபடுகின்ற ஒரு நிலை தமிழகம் முழுவதும் இருக்கின்ற நியலையில், திமுகவுக்கு மட்டும் இன்றைக்கு ஆர்ப்பாட்டம் நடத்த யார் அனுமதி கொடுத்த?. இன்றைக்கு எதிர்க்கட்சியினரின் குரல்வளையை நசுக்குகின்ற வகையில், ஜனநாயகத்திற்கு எதிராக, இந்த ஆட்சிக்கு எதிராக யாரும் குரல் கொடுக்க கூடாது, விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது, பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது, அமைதி பேரணி நடத்தக்கூடாது, ஆனால் திமுகவுக்கு மட்டும் ஆர்ப்பாட்டம் நடத்த ஒரே நாளில் அனுமதி யார் வழங்கினர். உங்கள் மீது யார் வழக்கு பதிவு செய்வது? இது வன்மையாக கண்டிக்க கூடிய விஷயம். மேலும், மதுரை மேலூரில் டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்து போராடுகின்ற மக்களுக்கு இந்த அரசு அனுமதி மறுக்கின்றது. ஊராட்சிகளை பேரூராட்சியுடனும், நகராட்சியுடனும், மாநகராட்சியுடனும் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கை முன்வைக்கும் பொதுமக்கள் போராட்டத்திற்கு அனுமதி மறுத்துவிட்டு, ஆனால் திமுக நடத்துகின்ற ஆர்ப்பாட்டதிற்கு மட்டும் எப்படி அனுமதி அளிக்கின்றனர், இது எந்த வகையில் நியாயம். திமுகவுக்கு ஒரு நியாயம், மற்ற கட்சிகளுக்கு ஒரு நியாயமா? என்ற கேள்விக்கு திமுக அரசும், முதலமைச்சர் அவர்களும் நிச்சயமாக பதில் சொல்ல வேண்டும். அறிவிக்கப்படாத எமர்ஜென்சியாக திமுகவின் ஆட்சி இருக்கிறது. இதை தேமுதிக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழகம் முழுவதும் நடக்கும் அனைத்து போராட்டங்களுக்கும் அனுமதி மறுக்கும் நிலையில், திமுக ஆர்ப்பாட்டத்திற்கு ஒரே நாளில் யார் அனுமதி கொடுத்தது, டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்த்து பொதுமக்கள் போராட்டத்திற்கு அனுமதி மறுத்ததையும் கண்டித்து அறிக்கை
Releated Posts
மதுவை ஒழிப்போம் என்ற விளம்பரம் ஒருபுறம், பொங்கல் நாட்களில் 725 கோடி ரூபாய் டாஸ்மாக் வருமானம் ஒருபுறம் இந்த முரண்பாட்டைக் கண்டித்து அறிக்கை
தமிழகத்தில் போதையின் பாதையில் யாரும் போக வேண்டாம் என்று தமிழக அரசின் மூலம் விளம்பரம் செய்யும் தமிழக முதல்வர், தன்னுடைய அதிகாரத்தில் ஒரு கையெழுத்திலேயே…
பொய் வாக்குறுதிகளால் பொங்கல் பரிசு தொகுப்பைத் தமிழக மக்கள் புறக்கணித்து, கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது குறித்து அறிக்கை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டை தாரர்களுக்கு, ஆண்டுதோறும் தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. கடந்த 2020ல் ஆயிரம் ரூபாய்,…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் புறக்கணிப்பது குறித்து அறிவிப்பு
இதுவரை தமிழக தேர்தலில் நடக்காத ஒரு தேர்தலாக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆடுகளை மந்தையில் அடைத்து வைத்தது போல் மக்களை அடைத்து வைத்து, ஜனநாயக…
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (10.01.2025) தமிழக ஆளுநரை சந்தித்தது குறித்து
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (10.01.2025) தமிழக ஆளுநர் அவர்களை மாலை 4 மணிக்கு, தலைமை…