தந்தை பெரியார் அவர்களின் 145 ஆவது பிறந்தநாளான இன்று (17.09.2024) தேமுதிக கேப்டன் ஆலயத்தில் (தலைமை கழகம்) கழக துணைச் செயலாளர் திரு.L.k சுதீஷ் அவர்கள் தலைமையில் பெரியார் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் கழகத் துணைச் செயலாளர் திரு.ப.பார்த்தசாரதி,Ex:எம்எல்ஏ அவர்கள், தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், வட்ட கழக செயலாளர்கள், மகளிர் அணியினர் மற்றும் தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.


