Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • சேலம் தலேமா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை தமிழக அரசு எடுத்து நடத்த வேண்டி அறிக்கை

சேலம் தலேமா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை தமிழக அரசு எடுத்து நடத்த வேண்டி அறிக்கை

சேலம் தலேமா எலக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் சூரமங்கலம் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் விலாசத்தில் 1998 ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த திரு.மார்ட்டின் பார்க் அவர்களால் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் 25 முதல் 35 வருடமாக பணி நியமனம் பெற்று 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். 2023 ஆம் ஆண்டு வரை ஏற்றுமதி செய்ததன் மூலம் பல கோடி லாபம் பெற்ற நிறுவனமாக இருந்துள்ளது. தலேமா நிறுவனத்தில் கடந்த காலத்தில் நிர்வாக இயக்குனர்களாக பணியாற்றி வந்தவர்கள் அதிக லாபம் பெற்று கொண்டு, வேறு மாவட்டத்திலும் மற்றும் வேறு மாநிலங்களிலும் புதிய கம்பெனி தொடங்கி நடத்தி வருகின்றனர். 25 வருடமாக அதிக லாபம் ஈட்டிய தலேமா நிறுவனத்தை, அயல் நாட்டு முதலாளிகள் பங்குதாரர்களாக வாங்கப்பட்டு, தமிழக தொழிலாளர்களின் வேலையை பறிப்பதற்காகவே நிறுவனத்தைக் கலைத்து, வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர். எனவே தலேமா நிறுவனத்தை 25.02.2025 தேதியன்று ஆலை மூடல் தமிழக அரசு மறுத்து அரசாணை வெளியிட்டுள்ளது. அரசிடம் அனுமதி பெறாமல் அயல்நாட்டு முதலாளிகள் தீர்மானம் நிறைவேற்றி தன்னிச்சையாக கதவடைப்பு செய்யப்படுகின்றனர். தலேமா நிறுவனத்தை கதவடைப்பு செய்யப்பட்டால் பள்ளி படிப்பு படிக்கும் குழந்தைகளை வைத்திருக்கும் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர் குடும்பங்கள் நடுத்தெருவில் தள்ளப்படும் சூழலை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். எனவே தலேமா நிறுவனத்தில் உடனடியாக தனி கவனம் செலுத்தி தமிழக அரசு எடுத்து நடத்தப்பட்டால் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர் குடும்பங்களும் வாழும், மேலும் ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும். ஏனென்றால் லட்சக்கணக்கில் இந்நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களின் கோரிக்கை நிறைவேற்ற தமிழக அரசு கவனம் செலுத்தி தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்தி தேமுதிக சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

Releated Posts

மனிதநேய அடிப்படையில் பிரபல திரைப்பட நடிகரும், சினிமா விமர்சகருமான திரு.சத்தியேந்திரா இறுதி சடங்கிற்கு தேமுதிக உதவ தயார்

பிரபல திரைப்பட நடிகரும், சினிமா விமர்சகருமான திரு.சத்தியேந்திரா அவர்கள் மரணமடைந்த செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது. அவரது குடும்பத்தினர் அல்லது உறவினர்கள் யாரும் தற்போது…

ByBySenthil KumarMay 29, 2026

(கேப்டன் ஆலயம்)தேமுதிக தலைமை கழகம் – மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் அறிவிப்பு

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் புரட்சி அண்ணியார், கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்,MLA., அவர்களின் தலைமையில் வரும்…

ByBySenthil KumarMay 28, 2026

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டி அறிக்கை

மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்க்க தமிழகத்திற்கு உரிமை இல்லை என்று கர்நாடக துணை முதலமைச்சர் திரு.டி.கே.சிவகுமார் தெரிவித்திருப்பதை தேமுதிக கடுமையாக கண்டிக்கிறது. தமிழ்நாட்டிற்கு உரிய…

ByBySenthil KumarMay 25, 2026

அரசு மருத்துவமனையில் தவறான மருத்துவ சிக்கிசையால் செவிலியர் கல்லூரி மாணவி உயிரிழப்பை கண்டித்து அறிக்கை

திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த செவிலியர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி சீதாலட்சுமி…

ByBySenthil KumarMay 23, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...