Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • சென்னை வேளச்சேரியில் ஆக்கிரமிப்பு என்று கூறி மக்கள் குடியிருப்புகளைக் கையகப்படுத்தும் முடிவை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டி அறிக்கை

சென்னை வேளச்சேரியில் ஆக்கிரமிப்பு என்று கூறி மக்கள் குடியிருப்புகளைக் கையகப்படுத்தும் முடிவை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டி அறிக்கை

வேளச்சேரி ஏரியினை மீட்பதாகக் கூறி சென்னை வேளச்சேரி பகுதியில் அமைந்துள்ள 850 வீடுகளை இடித்து, அங்கு வசிக்கும் 5000க்கும் மேற்பட்ட மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற திமுக அரசு முயல்வது வன்மையான கண்டனத்திற்குரியது. குடியிருப்புகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வீதியில் இறங்கிப் போராடிய பூர்வ குடி மக்களின் மீது காவல்துறை மூலம் திமுக அரசு அடக்கு முறைகளை ஏவுவது சிறிதும் மனிதநேயமற்ற கொடுஞ் செயலாகும். மேலும் தேர்தல் வாக்குறுதியில் திமுக பட்டா வழங்குவதாக வாக்குறுதி கொடுத்தது, ஆனால் இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், அவர்கள் குடியிருப்பு இடத்தை காலி செய்ய சொல்லி, அகற்றுவது எந்த வகையில் நியாயம். எனவே பல ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கு இந்த அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி பட்டா வழங்க ஆவண செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

Releated Posts

விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதி – கடலூர் மாவட்ட ஆட்சியர் நேரில் சந்திப்பு – பத்திரிக்கை செய்தி – 24.07.2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்,B.A., MLA., அவர்கள் இன்று (24.07.2026) கடலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம்…

ByBySenthil KumarJul 24, 2026

விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதி, பயனியர் நிழற்குடை திறப்பு விழா -பத்திரிக்கை செய்தி – 23.07.2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 2006 முதல் 2011 வரை விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பொழுது விருத்தாசலம்…

ByBySenthil KumarJul 24, 2026

தொடரும் லாக்கப் படுகொலைகள் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

தூத்துக்குடி மாவட்டம் அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் (வயது 24) என்பவர் காவல்துறை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் லாக்கப் படுகொலை செய்து…

ByBySenthil KumarJul 24, 2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக கர்நாடக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ஆதரவாக மேலும் வலுசேர்க்கும் வகையிலும், மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை எதிர்த்தும், காவிரி நதியிலிருந்து இதுவரை தமிழகத்திற்கு உரிய நீரை…

ByBySenthil KumarJul 21, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...