Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்ததைக் கண்டித்து அறிக்கை 

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்ததைக் கண்டித்து அறிக்கை 

சாம்சங் தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய தமிழக அரசு, இந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையொட்டி, தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாததை வலியுறுத்தி இன்றைக்குப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர்களின் நலன் காப்பதே ஒரு நல்ல அரசாக இருக்க முடியும், ஆனால் அவர்களைக் குண்டு கட்டாகப் போராட்ட களத்திலிருந்து அகற்றுவது ஏற்புடையது அல்ல. இது தொழிலாளர்களின் நலனில் அக்கறை இல்லாத ஒரு அரசு செய்யும் வேலையாகவே உள்ளது. எனவே ஏழைப் பங்காளர் என்று தங்களை மார்தட்டிக்கொள்ளும் திமுக அரசு, உடனடியாக தொழிலாளர்களின் கோரிக்கைக்குச் செவி சாய்த்து அந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டுமே தவிர, அவர்களை அராஜக முறையில் கைது செய்வதோ, குண்டு கட்டாக அப்புறப்படுத்துவது நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து, களத்திற்கு சென்று இருக்கும் நிலையில், இந்த கைது நடவடிக்கை என்பது கண்டிக்கத்தக்கதாகும். எனவே “கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்” என்பது போல் ஆகாமல், சாம்சங் ஊழியர்களுடைய கோரிக்கையை உடனடியாக செவி சாய்த்து தொழிலாளர்களின் நலனையும் கருத்தில் கொண்டு இந்த அரசு உடனடியாக அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

Releated Posts

தேமுதிக 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா கொடி நாள் செய்தி : 12.02.2025

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (12.02.2025) தலைமை கழகத்தில் (கேப்டன் ஆலயம்) 25 ஆம் ஆண்டு வெள்ளி…

ByBySenthil KumarFeb 12, 2025

25ஆம் ஆண்டு வெள்ளி விழா கொடி நாளை முன்னிட்டு கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தொண்டர்களுக்கு கடிதம்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் உயிரிலும் மேலான என் அன்பு கழக உடன்பிறப்புகளே உங்கள் அனைவருக்கும் முதற் கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பிப்ரவரி…

ByBySenthil KumarFeb 11, 2025

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கொடி நாள் (பிப்ரவரி -12) 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு கழகத்தின் கொள்கைகள் மற்றும் கொடியின் விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும் அனைத்து மாவட்டங்களிலும் கலந்து கொள்பவர்கள் விபரம் – 11.02.2025

வ. எண்மாவட்டத்தின் பெயர்பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் பெயர் / பதவி1நாமக்கல் மாநகர் நாமக்கல் வடக்கு நாமக்கல் தெற்குதிருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள், கழக பொதுச் செயலாளர்2செங்கல்பட்டுதிரு.டாக்டர்.V.இளங்கோவன்,M.B.B.S.,…

ByBySenthil KumarFeb 11, 2025

ரயிலில் கர்ப்பிணிப் பெண் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்பது கவலையளிக்கிறது. இதுபோன்ற துயர நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, கோவையிருந்து திருப்பதி செல்லும்…

ByBySenthil KumarFeb 7, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...