Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • கொலை, கொலையா தமிழகத்தில் படுகொலைகள் நடப்பதைக் கண்டித்து அறிக்கை

கொலை, கொலையா தமிழகத்தில் படுகொலைகள் நடப்பதைக் கண்டித்து அறிக்கை

நெல்லையில் நீதிமன்ற வாசலிலேயே இளைஞர் படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தையே இன்றைக்கு உலுக்கி இருக்கிறது. முன் விரோதம் காரணமாக இந்த படுகொலை செய்யப்பட்டதா அல்லது வேறு எதுவும் காரணமா என்பதை உடனடியாக காவல்துறை கண்டறிய வேண்டும். நான்கு பேர் கைது செய்யப்பட்டு இருந்தாலும், இதுபோன்ற தொடர் படுகொலைகள் தமிழகத்தில் நடப்பது மக்கள் இடையே மிகப் பெரிய ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. “தமிழ்நாடா?, இல்லை, கொலை நாடா” என்ற அளவுக்கு மக்கள் மத்தியில் கேள்வி எழுந்திருக்கிறது. “கொலை, கொலையா, தமிழகத்தில் படுகொலைகள்” அரங்கேறும் மாநிலமாகத் தமிழகம் மாறி இருக்கிறது. காவல்துறையை தன் வசம் வைத்திருக்கும் தமிழக முதல்வர் அவர்கள், இந்த சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார், இதுபோன்ற படுகொலைகளை எப்படித் தடுக்கப் போகிறார் என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். தமிழ்நாட்டில் தொடர்ந்து படுகொலைகள் நடப்பதற்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே இனிமேலும் இதுபோன்ற படுகொலைகள் நடக்காத வண்ணம் தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு சட்டம் ஒழுங்கை பாதுகாத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

Releated Posts

ஜம்மு காஷ்மீரில் பஹால்காம் பகுதியில்சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து அறிக்கை

ஜம்மு காஷ்மீர் பஹால்காம் பகுதியில் நேற்று (22-04-2025) நடந்த தீவிரவாத தாக்குதலில் 26க்கும் மேற்பட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள்  சுட்டுக் கொல்லப்பட்டு…

ByBySenthil KumarApr 24, 2025

நெசவுத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நெசவுத் தொழிலை சார்ந்திருக்கும் சிறு, குறு தொழிலாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். மேலும் வரும் மே 19ஆம் தேதி மீண்டும்…

ByBySenthil KumarApr 18, 2025

திருநெல்வேலி மாவட்டத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் சக மாணவர்களுக்கு இடையில் பென்சிலை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட பிரச்சனையால் அரிவாளால் வெட்டியதை கண்டித்து அறிக்கை

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு பகிலும் மாணவன் சக மாணவனுடன் பென்சில் வாங்குவதில் தகராறு ஏற்பட்டு அரிவாளால்…

ByBySenthil KumarApr 15, 2025

உயர் நீதிமன்ற உத்தரவை என்எல்சி நிர்வாகம் உடனடியாக அமல்படுத்த வேண்டி அறிக்கை

இந்தியாவில் தலைசிறந்த நிறுவனமான என்எல்சி நிறுவனம், ஆண்டுக்கு 3 ஆயிரம் கோடிக்கு மேல் லாபம் ஈட்டக்கூடிய நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு காரணம் இப்பகுதியில்…

ByBySenthil KumarApr 15, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...