Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • குடிநீரில் சாக்கடை நீர் கலந்த நிகழ்விற்கு,திமுக ஆட்சியின் அலட்சியத்தைக் கண்டித்து அறிக்கை

குடிநீரில் சாக்கடை நீர் கலந்த நிகழ்விற்கு,திமுக ஆட்சியின் அலட்சியத்தைக் கண்டித்து அறிக்கை

சென்னையில் தாம்பரம், மலைமேடு, காமராஜர் நகர் பல்லாவரத்தில் மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் சாக்கடை நீர் கலந்ததால், 33 பேர் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதில் மூன்று பேர் உயிரிழந்துவிட்டனர். 10க்கும் மேற்பட்டோர்கள் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார்கள். குடிநீரில் சாக்கடை நீர் கலந்தது தமிழக அரசின் நிர்வாக அலட்சியத்தின் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்று இருக்கின்றது. 3பேரின் உயிரிழப்பிற்கு தேமுதிக சார்பில் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். திறமை இல்லாத திராவிட மாடல் ஆட்சிக்கு இதுபோன்ற சம்பவங்களே சான்றாக உள்ளது. இதையெல்லாம் கவனித்துக் கொள்ளாமல், தன்னுடைய ஆட்சியை நல்லாட்சி என்றும், மக்கள் மீது அக்கறை கொண்ட ஆட்சியாகவும், தினந்தோறும் விளம்பரம் படுத்திக் கொள்வதிலேயே இந்த ஆட்சி கவனம் செலுத்துகின்றது. மக்களின் உயிரின் வலியை பொருட்படுத்தாததால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர் கதையாக இந்த ஆட்சியில் நடைபெற்று கொண்டு இருக்கிறது. தமிழக அரசு மக்கள் மீது முழு கவனம் செலுத்தி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டு உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 10 லட்சம் வழங்க வேண்டும். சிகிச்சை பெற்றுக் கொண்டு இருப்பவர்களுக்கு தலா ரூபாய் 5 லட்சம் வழங்கி முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தேமுதிக சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

Releated Posts

மதுவை ஒழிப்போம் என்ற விளம்பரம் ஒருபுறம், பொங்கல் நாட்களில் 725 கோடி ரூபாய் டாஸ்மாக் வருமானம் ஒருபுறம் இந்த முரண்பாட்டைக் கண்டித்து அறிக்கை

தமிழகத்தில் போதையின் பாதையில் யாரும் போக வேண்டாம் என்று தமிழக அரசின் மூலம் விளம்பரம் செய்யும் தமிழக முதல்வர், தன்னுடைய அதிகாரத்தில் ஒரு கையெழுத்திலேயே…

ByBySenthil KumarJan 18, 2025

பொய் வாக்குறுதிகளால் பொங்கல் பரிசு தொகுப்பைத் தமிழக மக்கள் புறக்கணித்து, கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது குறித்து அறிக்கை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டை தாரர்களுக்கு, ஆண்டுதோறும் தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. கடந்த 2020ல் ஆயிரம் ரூபாய்,…

ByBySenthil KumarJan 18, 2025

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் புறக்கணிப்பது குறித்து அறிவிப்பு

இதுவரை தமிழக தேர்தலில் நடக்காத ஒரு தேர்தலாக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆடுகளை மந்தையில் அடைத்து வைத்தது போல் மக்களை அடைத்து வைத்து, ஜனநாயக…

ByBySenthil KumarJan 11, 2025

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (10.01.2025) தமிழக ஆளுநரை சந்தித்தது குறித்து

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (10.01.2025) தமிழக ஆளுநர் அவர்களை மாலை 4 மணிக்கு, தலைமை…

ByBySenthil KumarJan 10, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...