Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • குடிநீரில் சாக்கடை நீர் கலந்த நிகழ்விற்கு,திமுக ஆட்சியின் அலட்சியத்தைக் கண்டித்து அறிக்கை

குடிநீரில் சாக்கடை நீர் கலந்த நிகழ்விற்கு,திமுக ஆட்சியின் அலட்சியத்தைக் கண்டித்து அறிக்கை

சென்னையில் தாம்பரம், மலைமேடு, காமராஜர் நகர் பல்லாவரத்தில் மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் சாக்கடை நீர் கலந்ததால், 33 பேர் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதில் மூன்று பேர் உயிரிழந்துவிட்டனர். 10க்கும் மேற்பட்டோர்கள் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார்கள். குடிநீரில் சாக்கடை நீர் கலந்தது தமிழக அரசின் நிர்வாக அலட்சியத்தின் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்று இருக்கின்றது. 3பேரின் உயிரிழப்பிற்கு தேமுதிக சார்பில் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். திறமை இல்லாத திராவிட மாடல் ஆட்சிக்கு இதுபோன்ற சம்பவங்களே சான்றாக உள்ளது. இதையெல்லாம் கவனித்துக் கொள்ளாமல், தன்னுடைய ஆட்சியை நல்லாட்சி என்றும், மக்கள் மீது அக்கறை கொண்ட ஆட்சியாகவும், தினந்தோறும் விளம்பரம் படுத்திக் கொள்வதிலேயே இந்த ஆட்சி கவனம் செலுத்துகின்றது. மக்களின் உயிரின் வலியை பொருட்படுத்தாததால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர் கதையாக இந்த ஆட்சியில் நடைபெற்று கொண்டு இருக்கிறது. தமிழக அரசு மக்கள் மீது முழு கவனம் செலுத்தி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டு உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 10 லட்சம் வழங்க வேண்டும். சிகிச்சை பெற்றுக் கொண்டு இருப்பவர்களுக்கு தலா ரூபாய் 5 லட்சம் வழங்கி முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தேமுதிக சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

Releated Posts

ரத்தன் பண்டிட் அவர்களை அரசு பணியில் நியமித்ததை ரத்து செய்த தமிழக முதலமைச்சர் திரு.விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

தமிழக முதலமைச்சர் திரு.விஜய் அவர்களுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாகவும், கேப்டன் அவர்களின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஜோதிடர் ரத்தன்…

ByBySenthil KumarMay 13, 2026

பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதிய மற்றும்  வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ – மாணவிகளுக்கும் வாழ்த்துகள்

பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி, அதில் தங்களின் அர்ப்பணிப்பாலும் கடின உழைப்பாலும் சிறந்த மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்ற அனைத்து மாணவ…

ByBySenthil KumarMay 8, 2026

திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே நேற்று (05.05.2026) நிகழ்ந்த வாகன விபத்தில் அவர் உயிரிழந்தார் என்கிற செய்தி…

ByBySenthil KumarMay 7, 2026

மதச்சார்பற்ற வெற்றி கூட்டணியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

மதச்சார்பற்ற வெற்றி கூட்டணி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.…

ByBySenthil KumarMay 5, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...