Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • கிண்டி அரசு மருத்துவவமனையில் மருத்துவரை தாக்கியதை கண்டித்து அறிக்கை

கிண்டி அரசு மருத்துவவமனையில் மருத்துவரை தாக்கியதை கண்டித்து அறிக்கை

கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவரை தாக்கியது கண்டனத்துக்குறியது. மேலும் மருத்துவரை தாக்கிய அந்த இளைஞருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு நிலை உள்ளது. தமிழக அரசு உடனடியாக மருத்துவர்களுக்கு பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும். இதுபோன்ற செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனையை தரவேண்டும். சட்டம், ஒழுங்கு இன்றைக்கு சீர்குலைந்து, கேள்விக்குறியாக உள்ளது. இதுபோன்ற நிகழ்வு நடப்பது அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. கடவுளுக்கு அடுத்ததாக உயிரை காப்பாற்றும் பணியை செய்பவர்கள் தான் மருத்துவர்கள்.

மேலும் பாதிக்கப்பட்ட இளைஞரின் தாய்க்கு சிகிச்சை அளித்தும், எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாத விரக்தியில் அந்த இளைஞன் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருப்பது தெரியவருகிறது. அதன் உண்மை நிலை அறிந்து, பாதிக்கப்பட்ட இளைஞரின் தாய்க்கு அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளித்து அவர்களை காப்பாற்ற வேண்டியதும் அரசின் கடமையாகும். அதேபோல் மனநிலையால் பாதிக்கப்பட்ட அந்த இளைஞன் எதற்காக கொடூர செயலில் கத்தியால் தாக்கினான் என்ற உண்மை நிலையை கண்டறிந்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பாதுகாப்பை பலப்படுத்தி, மருத்துவர்களுக்கு பாதுகாப்பு தரவேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.

Releated Posts

ஜம்மு காஷ்மீரில் பஹால்காம் பகுதியில்சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து அறிக்கை

ஜம்மு காஷ்மீர் பஹால்காம் பகுதியில் நேற்று (22-04-2025) நடந்த தீவிரவாத தாக்குதலில் 26க்கும் மேற்பட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள்  சுட்டுக் கொல்லப்பட்டு…

ByBySenthil KumarApr 24, 2025

நெசவுத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நெசவுத் தொழிலை சார்ந்திருக்கும் சிறு, குறு தொழிலாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். மேலும் வரும் மே 19ஆம் தேதி மீண்டும்…

ByBySenthil KumarApr 18, 2025

திருநெல்வேலி மாவட்டத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் சக மாணவர்களுக்கு இடையில் பென்சிலை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட பிரச்சனையால் அரிவாளால் வெட்டியதை கண்டித்து அறிக்கை

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு பகிலும் மாணவன் சக மாணவனுடன் பென்சில் வாங்குவதில் தகராறு ஏற்பட்டு அரிவாளால்…

ByBySenthil KumarApr 15, 2025

உயர் நீதிமன்ற உத்தரவை என்எல்சி நிர்வாகம் உடனடியாக அமல்படுத்த வேண்டி அறிக்கை

இந்தியாவில் தலைசிறந்த நிறுவனமான என்எல்சி நிறுவனம், ஆண்டுக்கு 3 ஆயிரம் கோடிக்கு மேல் லாபம் ஈட்டக்கூடிய நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு காரணம் இப்பகுதியில்…

ByBySenthil KumarApr 15, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...