Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • ஊழல் மற்றும் கோயில் நில மோசடிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை தொடர வேண்டி அறிக்கை

ஊழல் மற்றும் கோயில் நில மோசடிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை தொடர வேண்டி அறிக்கை

சென்னை, மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும், தவெக நிர்வாகியுமான வீராசாமி மீது தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்கில், குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பதை தேமுதிக வரவேற்கிறது. ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிராக சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில், எந்தவித பாரபட்சமும் இன்றி உரிய சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட வேண்டும். ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதே தேமுதிகவின் நிலைப்பாடாகும். அதேபோல், பழனி தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலம், போலி ஆவணங்கள் மூலம் தனிநபர்களின் பெயரில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கோயில் நிர்வாகத்தின் புகாரின் அடிப்படையில் சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதையும், இந்த முறைகேடு தொடர்பாக நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை சிபிசிஐடி (CBCID) வசம் மாற்றப்பட்டுள்ளது.  ஆனால், ரூ.100 கோடி மதிப்புள்ள கோயில் சொத்து வெறும் ரூ.2 கோடிக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் இந்த மிகப்பெரிய முறைகேடு எவ்வாறு நடைபெற்றது, இதன் பின்னணியில் யார் யார் செயல்பட்டனர், எந்த அதிகாரிகள் அல்லது இடைத்தரகர்கள் இதற்கு உடந்தையாக இருந்தனர் என்பன குறித்து முழுமையான, வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த முறைகேட்டில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் அதிகாரிகளாக இருந்தாலும், தனிநபர்களாக இருந்தாலும், அரசியல் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும், எந்தவித தயக்கமும் இன்றி அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து, நீதிமன்றத்தின் மூலம் உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். மேலும், முறைகேடாக பதிவு செய்யப்பட்டுள்ள அந்த நிலத்தை உடனடியாக மீட்டு, மீண்டும் பழனி தண்டபாணி சுவாமி மடத்தின் வசம் ஒப்படைக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் கோயில் சொத்துகள் மற்றும் பொதுச் சொத்துகளை அபகரிக்கும் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற முறைகேடுகள் இனி நடைபெறாத வகையில் பதிவு மற்றும் வருவாய்த் துறைகளில் கூடுதல் கண்காணிப்பு மற்றும் சீர்திருத்தங்களை செயல்படுத்த வேண்டும் என தேமுதிக சார்பாக  வலியுறுத்துகிறோம்.

Releated Posts

தேமுதிக வறுமை ஒழிப்பு தின நல உதவிகள் – பத்திரிக்கை செய்தி – 24.08.2026

*தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பத்மபூஷன்* *கேப்டன் விஜயகாந்த்* அவர்களின் பிறந்த நாளான, ஆகஸ்ட் 25-யை *”வறுமை ஒழிப்பு தினமாக”* தேமுதிக கடைப்பிடித்து…

ByBySenthil KumarAug 24, 2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின விழாவை நாம் சிறப்பாகக் கொண்டாடும் இந்த நன்னாளிலே, நம் தாய்நாட்டின் விடுதலைக்காகத் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த…

ByBySenthil KumarAug 14, 2026

கரூர் சிறுமி பாலியல் வன்கொடுமை முயற்சியை தடுத்து நிறுத்திய பாட்டிக்கு பாராட்டு

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள நான்கு வயது, 9 வயது, சிறுமிகள், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய பல முறை முயற்ச்சி செய்த அந்த…

ByBySenthil KumarAug 14, 2026

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 ராமநாதபுரம் மீனவர்கள் உள்ளிட்ட கைது செய்யபட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி அறிக்கை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களையும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது.…

ByBySenthil KumarAug 14, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...