மாநிலத் தலைநகரத்தின் மையப்பகுதியில், பொறியியல் கல்வி தலைமை நிறுவனமான அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது என்றால், சமூக விரோதிகளுக்கு, அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ எந்த பயமும் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. உடனடியாக, இந்தக் குற்றத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நீதியை தமிழக அரசும், காவல் துறையும் உடனடியாக செய்ய வேண்டும். “வேலியே பயிரை மேய்ந்தது” என்ற பழமொழிக்கு ஏற்ப அந்த மாணவிக்கு ஏற்பட்ட அநீதி பெரும் கண்டனத்திற்குரியது.
