Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு முதலமைச்சர் பதில் தர வேண்டி அறிக்கை

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு முதலமைச்சர் பதில் தர வேண்டி அறிக்கை

அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பாலியல் பலாத்கார துயர சம்பவம் குறித்து முதலமைச்சர் இதுவரை பதிலளிக்காதது ஏன்?. அண்ணா பல்கலைக்கழகத்தில் திடீரென்று சிசிடிவி கேமராக்கள் பழுதானது ஏன்?, இச்சம்பவத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என அமைச்சர் மன்றாடியது ஏன்?. மாணவர்கள் போராட்டம் நடத்தும் வரை குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்யாதது ஏன்?. அனைத்து கேள்விகளுக்கும் ஒரே விடை கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர் திமுகவைச் சேர்ந்தவரா? என்பதை மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். மிக முக்கியமான கல்லூரியிலேயே இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள் நடக்கும் பொழுது இங்கு படிக்கும் மாணவிகளுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது. ஆர்ப்பாட்டம் செய்பவர்களை மட்டும் அடக்குவதால், மாணவிக்கு நடந்த கொடூரம் இல்லை என்று ஆகிவிடாது. எனவே ஜனநாயக ரீதியாக கேள்விகள் கேட்பவர்களுக்கும், போராடுபவர்களுக்கும், இந்த அரசு உரிய பதில் அளிக்க வேண்டும். அந்த மாணவிக்கு ஏற்பட்டது போல் இனி எந்த மாணவிகளுக்கும், பெண்களுக்கும் இதுபோன்ற நிலை ஏற்படாத வண்ணம் இந்த அரசு பாதுகாத்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

Releated Posts

மதுவை ஒழிப்போம் என்ற விளம்பரம் ஒருபுறம், பொங்கல் நாட்களில் 725 கோடி ரூபாய் டாஸ்மாக் வருமானம் ஒருபுறம் இந்த முரண்பாட்டைக் கண்டித்து அறிக்கை

தமிழகத்தில் போதையின் பாதையில் யாரும் போக வேண்டாம் என்று தமிழக அரசின் மூலம் விளம்பரம் செய்யும் தமிழக முதல்வர், தன்னுடைய அதிகாரத்தில் ஒரு கையெழுத்திலேயே…

ByBySenthil KumarJan 18, 2025

பொய் வாக்குறுதிகளால் பொங்கல் பரிசு தொகுப்பைத் தமிழக மக்கள் புறக்கணித்து, கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது குறித்து அறிக்கை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டை தாரர்களுக்கு, ஆண்டுதோறும் தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. கடந்த 2020ல் ஆயிரம் ரூபாய்,…

ByBySenthil KumarJan 18, 2025

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் புறக்கணிப்பது குறித்து அறிவிப்பு

இதுவரை தமிழக தேர்தலில் நடக்காத ஒரு தேர்தலாக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆடுகளை மந்தையில் அடைத்து வைத்தது போல் மக்களை அடைத்து வைத்து, ஜனநாயக…

ByBySenthil KumarJan 11, 2025

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (10.01.2025) தமிழக ஆளுநரை சந்தித்தது குறித்து

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (10.01.2025) தமிழக ஆளுநர் அவர்களை மாலை 4 மணிக்கு, தலைமை…

ByBySenthil KumarJan 10, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...